tamilnadu

img

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணியாளர் உயிரிழப்பு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டம்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணியாளர் உயிரிழப்பு
இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டம்

தருமபுரி, ஜூன் 10- தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழி யர் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரி ழந்த நிலையில், அவரது உறவினர்கள் பாலக்கோடு அருகே உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலு வலகத்தை முற்றுகையிட்டதால் பர பரப்பு ஏற்பட்டது. தருமபுரி - பெங்களூரு இணைக் கும் வகையில் புதிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை, தருமபுரி, பாலக்கோடு, ராயக்கோட்டை, ஓசூர் வரை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒப்பந்த அடிப் படையில் செடிகளுக்கு நீர் ஊற்று தல், சாலையை சுத்தம் செய்தல், பொதுக் கழிவறையை சுத்தம் செய்தல் உள் ளிட்ட பணிகளை மேற்கொள்ள நூற்றுக் கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர். புலிக்கரை கிரா மத்தைச் சேர்ந்த மணிவண்ணன் (49)  என்பவர், சுங்கச்சாவடி பகுதியிலுள்ள பொதுக்கழிவறையை சுத்தம் செய்து  கொண்டிருந்த போது, சந்தேகத்திற் குரிய வகையில் உயிரிழந்துள்ளார்.  இதையடுத்து சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை மேற்கொண்டு வரும் பிளாக் டெக் நிறுவன ஊழியர்கள், அவரது உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் உயிரிழந்த மணிவண் ணன் உடலை வாங்க மாட்டோம் என்றும் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவரைபோன்று நூற்றுக் கும் மேற்பட்ட தொழிலாளிகள் இந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகின் றனர். பணியின் போது விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டால் நிறுவனத்தி லிருந்து எந்தவொரு இழப்பீடும் தருவ தில்லை. நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து இந்திய தேசிய நெடுஞ்சா லைத்துறை ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதன்பின் பாலக்கோடு போலீ சார் பேச்சுவார்த்தை நடத்தியத்தைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் அங்கி ருந்து சென்றனர்.