காட்டுத்தீயால் அரிய வகை செடிகள் சேதம்
காட்டுத்தீயால் அரிய வகை செடிகள் சேதம் நாமக்கல், மார்ச் 5- ராசிபுரம் அருகே மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், மரங்கள் மற்றும் அரிய வகை செடிகள் தீக்கிரையாகின. நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம் பகுதியானது, கொல்லி மலை, சித்திரை மலை, போதமலை, கெடமலை, பசிறுமலை உள்ளிட்ட மலைகள் சூழ்ந்ததாக அமைந்துள்ளது. ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை, பசிறுமலை பகுதியில் காட்டுப்பன்றி, மான்கள், நரி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக ளவில் காணப்படுகின்றன. தற்போது கோடை வெயில் கொளுத்த துவங்கியுள்ள நிலையில், மலைப்பகுதியில் வெயில் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து காணப் படுகிறது. இந்நிலையில், பசிறுமலை பகுதியில் புதனன்று சிறிய அளவிலான புகை வெளியேறுவதைக் கண்ட அப் பகுதியை சேர்ந்தவர்கள், ராசிபுரம் வனத்துறையினருக்கு தக வல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்ப்பதற்குள்ளாகவே, பசிறுமலை மேல் பகுதியில் காட்டு தீயானது மேலும் பரவத் தொடங்கி யது. காட்டுத்தீ பரவல் காரணமாக வனத்துறையினர் மலை யில் பற்றிய தீயை அணைக்க முடியாமல் திணறினர். காட்டுத் தீயானது மலைப்பகுதி முழுவதும் பரவியதால், சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் மற்றும் அரிய வகை செடிகள் தீக் கிரையாகின. தொடர்ந்து பல்வேறு இடங்களில் பரவி யுள்ள காட்டுத்தீயை தீயணைப்புத் துறை வீரர்கள் அணைத்து வரும் நிலையில், அருகாமையில் உள்ள பொதுமக்கள் பாது காப்பாய் இருக்க வேண்டுமென வனத்துறையினர் அறிவு றுத்தியுள்ளனர்.
ஏற்காட்டிற்கு இரவு நேரம் செல்ல தடை
ஏற்காடு மலைப்பாதையில் இரவு நேரப் பயணத்திற்குத் தடை விதித்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது. சேலத்தில் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண்ணின் சடலம், ஏற்காடு மலைப்பாதையில் அழுகிய நிலையில் 60 அடி பாலம் அருகே 20 அடி பள்ளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் ஏற்காடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குற்றவாளியைக் கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் சென்று வருவதால், சுற்றுலாப் பயணிகள் போல் சமூக விரோதிகள் ஏற்காடு சோதனைச்சாவடியை மிகச் சுலபமாகக் கடந்து விடுகின்றனர். குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் விதத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஏற்காட்டிற்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு ஏற்காடு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், உள்ளூர் மக்கள் சோதனைக்குப் பின்னரே உரிய ஆவணம் இருந்தால் மட்டுமே மலைப்பாதையில் பயணிக்க முடியும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெப்ப அயற்சியால் கோழிகள் உயிரிழக்கும் அபாயம்
வெப்ப அயற்சி காரணமாக முட்டையிடும் கோழிகள் உயிரி ழக்கும் அபயாம் ஏற்படும், என வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த வார வானிலையை பொருத் தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 96.8 மற் றும் 71.6 என்ற நிலையில் காணப்பட் டது. மாவட்டத்தில் மழை எங்கும் பதி வாகவில்லை. அடுத்த ஐந்து நாள்க ளுக்கான வானிலையில், வறண்ட நிலை காணப்படும். பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப் படும். காற்று பெரும்பாலும் கிழக்கி லிருந்து மணிக்கு 12 கி.மீ. வேகத் தில் வீசக்கூடும். மேலும், கோடை காலம் தொடங்க உள்ளதால் பகல் மற் றும் இரவு வெப்பநிலைகளில் மாற் றம் காணப்படுகிறது. இதனால் முட்டையிடும் கோழிகளில் தீவன எடுப்பு வெப்ப அயற்சி காரணமாக குறையும். மேலும், வெப்ப அயற்சி காரணமாக கோழிகள் இறக்க நேரி டும். ஆரம்ப கால கோடை காலத்தை சமாளிக்கவும், வெப்ப தாக்கத்தி லிருந்து கோழிகளை பாதுகாக்கவும் பகல் வேளையில் மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை தீவனம் அளிக்கக்கூடாது. கோடை காலத் தில் கோழிகளுக்கு நாள் முழுவதும் அதிக வெப்பமில்லாமல் குளிர்ச்சி யாக குடிநீர் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கோழித் தீவனத் தில் சோயா எண்ணெய்யை சேர்ப்ப தன் மூலம் வெப்ப அயற்சியை குறைக்கலாம். மேலும், தீவனத்தில் தேவை யான அளவு எலக்ட்ரோலைட்ஸ் மற் றும் உயிர்சத்துகள் சேர்ப்பதன் மூலம் வெப்ப அயற்சியின் தாக்கம் மற் றும் உற்பத்தி குறைவினை தவிர்க் கலாம். கோழிப்பண்ணைகளில் இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் (12 முதல் ஒரு மணி வரை) விளக்கு களை எரியவிடுவதன் மூலம் தினமும் கோழிகள் உட்கொள்ளும் அடர் தீவனத்தின் அளவை அதிகரிக் கலாம். வெப்பம் அதிகமாக இருக் கும் மதிய வேளையில் தண்ணீர் தெளிப்பான்களை பயன்படுத்தி வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க லாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.