tamilnadu

ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள், சேலம் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இதர நிலை பணி மாறுதல் உத்தரவினை உடனடியாக வெளியிட வேண் டும். மேலும், காலம் கடந்த ஆய்வுக் கூட்டத்தினை கைவிட  வேண்டும். ‘மக்களுடன் முதல்வர் முகாம்’ திட்டத்திற்கு உடனடியாக நிதியை விடுவிக்க உரிய வழிகாட்டுதல் நெறிமுறை வெளியிட வேண்டும், ஆகிய மூன்று அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழக முழுவதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்  சங்கத்தினர் செவ்வாயன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதி யாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வளர்ச்சி அலுவலகத்தில் காத் திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு வரங்கன், மாவட்டத் தலைவர் செந்தில், செய லாளர் ஜான் ஆஸ்டின், பொருளாளர் வடி வேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.