சிபிஎம் தலைவர்கள் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஜூன் 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன் னணி குண்டர்களை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக் கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி நடத்திய மக்கள் சந் திப்பு பிரச்சார கூட்டத்தில் புகுந்து, இந்து முன்னணி கும்பல் ரவுடித் தனத்தில் ஈடுபட்டனர். இந்த கொடூ ரமான தாக்குதலை கண்டித்து தமிழ கம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால்ரோட் டில் நகரச் செயலாளர் வி.பாண்டி யன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. சுந்தரராஜன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் பா.லலிதா, பி.ராஜா மற் றும் மூத்த தலைவர் ப.மாரி முத்து ஆகியோர் கண்டன உரை யாற்றினர். நகரக்குழு மற்றும் தாலுகா உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர். சிவகிரி கடைவீதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம்.சசி தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.சண் முகவள்ளி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ரண திவேல், நகரச் செயலாளர் மணி வண்ணன், திராவிடர் கழக மாவட்ட காப்பாளர் சண்முகம், தாலுகா கமிட்டி உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட திரளா னோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற னர். கோபி பேருந்து நிலையம் முன்பு சிபிஎம் தாலுகா செயலாளர் க.பெருமாள் தலைமையில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, சிஐடியு மாவட்ட செயற் குழு உறுப்பினர் சுப்பிரமணி, சிபிஎம் இடைகமிட்டி செயலாளர் துரைசாமி, ததீஒமு தாலுகா செய லாளர் ரங்கசாமி, தலைவர் தனசிங், பொருளாளர் மாரிமுத்து, மாதர் சங்க முத்தாயம்மாள், கிருஷ்ண வேணி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியம் அன்னை சத்யா நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, கட்சியின் முன்னாள் கிளைச் செயலாளர் கே.சண்முகம் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட குழு உறுப்பினர் மோகன், முன் னாள் பேரூராட்சி கவுன்சிலர் எம்.ராஜா, எஸ்.பி.காளிமுத்து, மாதர் அரங்கம் கிளைச் செயலாளர் ராணி, கிளைச் செயலாளர் ஆர்.லெனின் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.