கோவை, ஜூலை 8 – கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிகள் மூவருக்கு ரூ. 1.69 லட்சத் தில் மூன்று சக்கர வாகனத்தை புத னன்று கோவை நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் வழங்கினார். கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 8 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்க மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நிதி ஒதுக்கீட்டை செய்திருந்தார். இதன் தொடர்ச்சியாக புதனன்று முதல் கட்டமாக மூன்று மாற்று திறனாளி களுக்கு ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 200 மதிப்பிலான வாகனம் வழங்கப் பட்டது. கோவை காந்திபுரம் 2 ஆவது வீதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் பங்கேற்று பயணாளிகளான சிங்காநல்லூர் கள்ளிமடையை சேர்ந்த பாலன், சூலூர் தாலுகா விற்குட்பட்ட சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு, பெரிய குயிலைச் சேர்ந்த தங்கவேல் ஆகியோ ருக்கு வாகனத்தை வழங்கினார். வாகனத்தை பெற்றுக்கொண்ட பயனாளிகள் பி.ஆர்.நடராஜன் எம்.பி.,க்கு மனநெகிழ்வோடு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் மாற்று திறனாளி கள் நலத்துறை மாவட்ட அலுவ லர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிக ளும், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.