tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

வெறுப்பு அரசியலும் வக்பு சட்ட திருத்தமும்

சேலம், மே 5- வெறுப்பு அரசியலும் வக்பு சட்ட திருத்தமும் என்ற  தலைப்பில் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை சார்பில்  சேலம் சாமிநாதபுரம் பகுதியில் திறந்தவெளி கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங் கிணைப்பாளர் எம்.சேது மாதவன் தலைமையில் திறந்த வெளி கருத்தரங்கம் நடைபெற்றது. வி.சரவணன் வர வேற்றார். இதில் கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு  பங்கேற்று கருத்துரையாற்றினார். இவர் பேசுகையில், வக்பு சட்டத்தை பாஜக மத நல்லிணக் கத்தை கெடுக்கும் வகையில் நிறைவேற்றியுள்ளது. இந்த  சட்ட திருத்தம் என்பது முஸ்லிம் மக்களின் சொத்துக்களை கள வாடும் நோக்கமாக உள்ளது. பாஜக மோடி அரசு இந்து  முஸ்லிம் ஒற்றுமையை பிளவுபடுத்தும் நோக்கில் செயல் படுகிறது. தற்போது முஸ்லிம் மக்களின் சொத்துக்களை அழித்துவிட்டு அதன் பிறகு கிறிஸ்துவ மக்களின் சொத்துக் களை அழிக்க நினைக்கிறார்கள். மத நல்லிணக்கத்தை சூறை யாடும் செயலாக இந்த சட்டம் உள்ளது, இதனைஒரு போதும் நாம் அனுமதிக்ககூடாது என்றார். இந்நிகழ்வில், சிபிஎம் வடக்கு மாநகர செயலாளர் என். பிர வீன் குமார், விசிக மாவட்டச் செயலாளர் காஜா மைதீன், முஸ் லிம் லீக் மாவட்டத் தலைவர் சையத் மூசா, தமுமுக பிரச்சார  பிரிவு மாநிலச் செயலாளர் சேவகன் இப்ராஹிம், பாமக  மாவட்டத் தலைவர் ஷேக் முகமது, ஒருங்கிணைப்புக் குழு  உறுப்பினர் எஸ். டேனியல் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

உதகை ஏரி கழிவுகள் சதுப்பு நிலத்தில்  கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு

உதகை, மே 5 – உதகையில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் உதகை ஏரியில் தூர்வாரப்படும் கழிவுகள், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலத்தில் கொட்டப்படுவ தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள படகு இல்லம் ஏரி,  1823 ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்டது. ஆரம் பத்தில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட இந்த ஏரி, காலப் போக்கில் நகரின் கழிவுநீர் கலக்கும் இடமாக மாறியது. விவ சாய நிலங்களில் இருந்து வரும் மண்ணும் படிந்ததால் ஏரி யில் சகதியும் ஆகாயத்தாமரையும் அதிக அளவில் காணப் பட்டது. இதையடுத்து, ஏரியை தூர்வார சிறப்பு பகுதி மேம் பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7½ கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த  ஆண்டு அக்டோபர் மாதம் தூர்வாரும் பணி தொடங்கியது. தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இப் பணியை தொடங்கி வைத்தார். 18 மாதங்கள் ஒப்பந்தம் போடப் பட்ட நிலையில், கடந்த 5 மாதங்களாக இப்பணிகள் மந்த மாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஏரியில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் வாங்காததால், லாரிகள் மூலம் உதகை நகராட்சி குப்பை தளத்தில் கொட்டப்பட்டு வந்தது.  குப்பை தளம் சுமார் 5 கி.மீ தூரத்தில் இருப்பதால், கழிவு கள் வழியிலேயே கொட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, ஏரியிலிருந்து குழாய் அமைத்து ஏரியின் மறுபு றம் உள்ள சதுப்பு நிலத்தில் கழிவுகள் கொட்டப்பட்டு வரு கின்றன. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த சதுப்பு  நிலத்தில் ஏரி கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடி யாக தலையிட்டு, சதுப்பு நிலத்தில் கழிவுகள் கொட்டுவதை  தடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

தாராபுரம் விபத்து நான்கு பேர் மீது வழக்குப் பதிவு

திருப்பூர், மே.5- தாராபுரம் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த குடும்பத்தினர் விழுந்து இருவர் உயிரிழந்தனர், ஒருவர் படுகா யம் அடைந்தார். இந்த சம்பவத்தில் உதவிப் பொறியாளர், ஒப் பந்ததாரர் உள்பட நான்கு பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு  பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவருக்கு தலா ரூ.3 லட்சம் வீதமும், காய மடைந்த சிறுமிக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் என  மொத்தம் ரூ.7 லட்சம் தமிழ்நாடு முதலமைச்சர் நிவா ரணம் அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குள்ளாய்பாளை யம் பகுதியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் சாலை விரி வாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஞாயி றன்று தாராபுரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் நடராஜ்,  ஆனந்தி தம்பதி தங்கள் மகளுடன் இருசக்கர வாகனத் தில் வந்தனர். இங்கு சாலையில் பெரும் பள்ளம் இருப்பது  தெரியாத நிலையில், அந்த பள்ளத்தில் விழுந்து சம்பவ  இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த னர். இவர்களது 13 வயது மகள் படுகாயம் அடைந்து மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து அறிந்து  மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அங்கு பார்வையிட்டார்.  விபத்து குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு செயலாளர் சி.மூர்த்தி, திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுப்பதற்கு, முன் இங்கு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறிய நெடுஞ்சாலைத் துறை  அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தாராபுரம் காவல் துறையி னர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  நெடுஞ்சாலைத் துறை  உதவிப் பொறியாளர் கணேஷ், சாலை விரிவாக்க பணி பொறி யாளர் குணசேகரன், பணியின் மேற்பார்யாளர் கௌதம்  மற்றும் ஒப்பந்ததாரர் சிவகுமார் ஆகிய நான்கு பேர்  மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதை யாக செயல்பட்டு காயம் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்து தல், பொது இடத்தில் பாதுகாப்பற்ற முறையில் பள்ளம்  தோண்டி உயிரிழப்பை ஏற்படுத்துதல் மற்றும் அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வகையில்  செயல்பட்டது உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் உயிரிழந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு மேற் கொண்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் உரிய பாது காப்பு நடைமுறைகளை பின்பற்றி, விரைந்து சாலை விரி வாக்கப் பணியை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.