உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
கோவை, ஜூன் 1 – கோவைமாவட்ட தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குநர் சங்க பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கோவைமாவட்ட தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குநர் சங்க பொதுக்குழு கூட்டம் கோவை நேரு விளை யாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தலைவராக, ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர், செய லாளராக பன்னீர், பொருளாளராக ஜேம்ஸ் கென்னடி, மக ளிர் அமைப்பு தலைவராக திருச்செல்வி, சட்டஆலோசகர் வழக்கறிஞர் ஞானமணி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்ட னர். இக்கூட்டத்தில், உடற்கல்வி வளர்ச்சிக்காக அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் இருப்பது போல அனைத்து பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கை பாரா மல் உடற்கல்வி ஆசிரியர் அல்லது ஆசிரியை நியமிக்கபட வேண்டும். தற்போது உள்ள மாணவர்களின் வாழ்க்கை சூழ லுக்கு ஏற்ப, சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் உரு வாக்கிய அரசாணை 525 மற்றும் 150 ரத்து செய்யப்பட வேண்டும். திறமையான விளையாட்டு சாதனையாளர்களை உருவாக்கிட உடற்கல்வி ஆசிரியர்களை பிற பணிகளில் ஈடு படுத்தக்கூடாது. மாணவர்களுக்கு உடற்கல்விக்கு என்று தனி யாக ஒரு செட் சீருடை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்களை தமிழக முதல்வர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்புவது என இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
விபத்தில் 2 பேர் உயிரிழப்பு மேட்டுப்பாளையம்,
ஜூன் 1 மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை பகுதியில் சாலையின் தடுப்பு சுவர் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டம், ராமநாதபுரம் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் ஐந்து பேர் நீலகிரிக்கு செல்வ தற்காக காரில் ஞாயிறன்று அதிகாலை மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மேட்டுப்பாளை யம் காரமடை சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரின் மீது கார் மோதியதில் காரில் பயணம் செய்த ஐந்து பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் செல்வம், மதன்குமார் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் அளிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உயிரிழந்த வர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப் பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த தினேஷ், மாணிக்கம், மோகன் என மூன்று பேரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
விசைத்தறி தொழிலாளர்களுக்கான காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த சிஐடியு வலியுறுத்தல்
ஈரோடு, ஜூன் 1- விசைத்தறி தொழிலாளர்களுக் கான காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டுமென ஈரோடு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மகா சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஈரோடு பொதுத் தொழிலாளர் சங்கத் தின் 40 ஆவது மகாசபை கூட்டம் தோழர் டி.பி.முத்துசாமி நினைவகத் தில் ஞாயிறன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வேலை அறிக்கை சமர்பித்தார். ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.பாண்டி யன் வாழ்த்திப் பேசினார். விசைத்தறி தொழிலாளர் சம்மேளனப் பொருளாளர் எம்.அசோகன் நிறைவுரையாற்றினார். இதில், விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு 8 மணி நேர வேலை, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்டப் பாதுகாப்பு களை உறுதிப்படுத்த வேண்டும். ஒன்றிய அரசின் காப்பீட்டு திட்டத்தைத் தொடர வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட் டத்தில், தலைவராக எஸ்.சுப்ரமணி யன், பொதுச் செயலாளராக எஸ்.கிருஷ்ணன், பொருளாளராக பி.குமரே சன், துணை தலைவர்களாக 3 பேர், துணை செயலாளர்களாக 3 பேர் மற்றும் 12 பேர் கொண்ட நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது.
மாணவர் சங்க அமைப்பு கூட்டம்
திருப்பூர், ஜூன் 1 - இந்திய மாணவர் சங்கத்தின் உடுமலைபேட்டை அமைப் புக்கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. உடுமலை ஸ்டாலின் நிலையத்தில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு முன்னாள் வாலிபர் சங்க நிர்வாகி கன கராஜ் துவக்கவுரை ஆற்றினார். இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கல்கி ராஜ், மாவட்டச் செயலாளர் பிரவீன் குமார், மாவட்ட இணைச் செயலாளர் மணிகண்டன் ஆகி யோர் உரையாற்றினர். இறுதியாக உடுமலை பகுதி ஒருங்கிணைப்பு குழு தேர்வு செய்யப்பட்டது. ஒருங்கிணைப் பாளராக அறவாளி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் எம். ரித்திக், ஆன்ட்ரோஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள் ளனர்.