tamilnadu

img

ஈஷா யோகா மையத்தில் 2ஆவது நாளாக விசாரணை!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் காவல் துறை, சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் 2ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை வடவள்ளியைச் சேர்ந்த  முனைவர் எஸ்.காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட் கொணர்வு வழக்கில் ஈஷா யோகா  மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்ற விவ ரத்தை வரும் 4-ஆம் தேதி காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவின்படி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளவர்களிடம் அக்டோபர் 1 அன்று காவல் துறை, சமூக நலத்துறை, குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், இன்று 2ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 100க்கும் மேற்பட்டோர் 6 குழுக்களாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.