கோயம்புத்தூர், ஜூலை 5– என்டிசி பஞ்சாலை தொழிலாளர்க ளுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. ஒவ்வொரு தொழிலா ளிக்கும் அடிப்படை ஊதியத்திலிருந்து ரூ.400 உயர்வு என்கிற அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிற்கு சொந்தமான தேசிய பஞ்சாலை கழகம் (என்டிசி) செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஐந்து என்டிசி பஞ்சாலைகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்க ளுக்கான ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக் கைகள் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் மூலம் புதுப்பிக்கப்படும். பழைய ஒப்பந்த காலம் 10.9.2018ல் முடிவடைந்ததையடுத்து. புதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அங்கிகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான எல்பிஎப், சிஐடியு, ஐஎன்டியுசி, என்டிஎல்எப் மற்றும் ஏடிபி தொழிற்சங்க பிரதிநிதிகள் என்டிசி நிர்வா கத்தோடு பேச்சு வார்த்தை நடத்தினர். பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப் படாத நிலையில், மத்திய தொழிலாளர் நலத்துறையின் முன்னிலையில் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்றது. இதனிடையே இடைப்பட்ட காலத்தில் என்டிசி நிர்வாகத்தோடு ஒரு புரிந்து ணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் தேர்தல் நடைமுறையை காரணம் காட்டி இதனை நிர்வாகம் நடைமுறைப்படுத்த வில்லை. இந்நிலையில் வெள்ளியன்று மதுரை மத்திய தொழிலாளர் நலத்துறை அலுவ லகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை யில் எல்பிஎப் சார்பில் பார்த்தசாரதி, சிஐடியு சார்பில் சி.பத்மநாபன், சேவி யர், சிற்றரசு, பங்கஜா மில் ராஜேந்திரன், என்டிசி ஷோரூம் ராஜேந்திரன், ஐஎன்டி யுசி சார்பில் சீனிவாசன், என்டிஎல்எப் சார்பில் ரங்கசாமி, ஏடிபி சார்பில் கோபால் ஆகியோர் பங்கேற்றனர். நிர்வாகத்தின் சார்பில் பொறுப்பு அலுவலர் எஸ்.வெங் கடேஷ், பொதுமேலாளர் (நிதி) சுதாகரன், துணை பொதுமேலாளர் (மனிதவள மேம்பாடு) ராஜேந்திரகுமார் ஆகியோ ரும், மத்திய தொழிலாளர் துறையின் சார்பில் மண்டல மத்திய தொழிலாளர் துறை ஆணையாளர் பி.சிவராஜன் ஆகி யோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இதில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப் பயன்கள் குறித்த உடன்பாடு கையெழுத் தானது. இதில் அடிப்படை ஊதியத்தில் இருந்து ரூ.400 உயர்த்திக் கொடுக்கப்படும். மாறு படும் பஞ்சப்படி புள்ளிக்கு 46 பைசாவிலி ருந்து 50 பைசாவாக 4 பைசா உயர்த்தப்பட் டுள்ளது. வீட்டு வாடகைப்படி ரூ.400ல் இருந்து 610 ரூபாயாகவும், விடுப்பு பய ணச் சலுகை (எல்டிசி) ஒரு வேளை நாளுக்கு 1 ரூபாயிலிருந்து ரூ.5 உயர்வு அளிக்கப்பட்டு 6 ரூபாயாக எல்டிசி உயர்த் தப்பட்டுள்ளது. தற்செயல் விடுப்பு (சிஎல்) ஆறு நாட்களில் இருந்து ஏழு நாட்க ளாக உயர்த்தி வழங்கப்படும். நிலுவைத் தொகையை முப்பது நாட்களுக்குள் வழங்கப் படும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் மூலம் ரூ.1,700 அனை வருக்குமாக ஊதிய உயர்வாய் இருக்கும். இந்த ஒப்பந்தம் ஐந்து வருடம் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.