tamilnadu

img

பேச்சுவார்த்தை தோல்வி – விசைத்தறியாளர்கள் கவலை!

பேச்சுவார்த்தை தோல்வி – விசைத்தறியாளர்கள் கவலை!

லி உயர்வு தொடர்பான முத்தரப்பு  பேச்சுவார்த்தையில் சிறிய முன் னேற்றம் மட்டுமே ஏற்பட்டதாகவும், முழுமையான உடன்பாடு எட்டப்பட வில்லை என்றும் விசைத்தறியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கூலி உயர்வுகோரி விசைத்தறியா ளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்ற னர்.  இந்நிலையில், கோவை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில் செவ் வாயன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சி யர் பவன்குமார், திருப்பூர் மாவட்டத் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணை யர் பிரேமா, கோவை தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையர் சாந்தி, உதவி ஆணையர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர். விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும்  தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்  இடையே நடைபெற்ற இந்த கூட்டத் தில் கூலி உயர்வு குறித்து விவாதிக்கப் பட்டது. இருப்பினும், பேச்சுவார்த்தை யில் சிறிய முன்னேற்றம் மட்டுமே ஏற் பட்டதாகவும், முழுமையான உடன் பாடு எட்டப்படவில்லை என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பின்னர், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியா ளர்கள் சங்க நிர்வாகி பூபதி செய்தியா ளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “மாவட்ட ஆட்சியர் மற் றும் தொழிலாளர் நலத்துறையினர் இந் தப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த னர். இதில் சிறிய முன்னேற்றம் ஏற் பட்டிருக்கிறது. ஆனால், ஜவுளி உற் பத்தியாளர்கள் தரப்பில் இருந்து முன்மொழியப்பட்ட கூலி உயர்வுக்கும், எங்களின் கோரிக்கைக்கும் இடையே இன்னும் பெரிய இடைவெளி உள் ளது. நாங்கள் 60 சதவீத கூலி உயர்வு  கேட்டிருந்தோம். அதில் சிறிது குறைத்து  வந்திருக்கிறோம். ஆனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் மிகச் சிறிய அளவி லான உயர்வை மட்டுமே வழங்குவ தாகக் கூறியுள்ளனர். கணிசமான கூலி  உயர்வு இல்லையென்றால், விசைத்த றித் தொழிலைத் தொடர்ந்து நடத்துவது  சவாலாக இருக்கும். தற்போது விசைத் தறியாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து நிர்வாகிகளுடன் கூடி ஆலோ சித்து முடிவெடுப்போம். நாங்கள் கேட்ட  கூலியையோ, அவர்கள் முன்மொழிந்த  தொகையையோ இப்போது வெளிப் படையாகக் கூற முடியாது. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வில்லை என்பதை உறுதியாகக் கூற  முடியும். விசைத்தறியாளர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டு வருவதால், கோவை மற்றும் திருப் பூர் மாவட்டங்களில் ஜவுளித் தொழில்  பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்து வது குறித்து விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் விரைவில் கூடி முடி வெடுக்க உள்ளனர். போராட்டத்தை முன்னெடுப்பது குறித்து ஆலோசனை கள் நடத்தி, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றார். வியாபாரிகள் கடைகள் அடைத்து ஆதரவு வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் விசைத்தறியாளர்களின் உண் ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக கோவை மற்றும் திருப்பூர் புறநகரப் பகுதிகளில் செவ்வாயன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு, ஆத ரவை தெரிவித்தனர். இதன்படி, கோவை மற்றும் திருப் பூர் புறநகர் பகுதிகளான சோமனூர், சாமளாபுரம், காரணம்பேட்டை, பரு வாய், புதுப்பாளையம், அவிநாசி, பெரு மாநல்லூர், கருமத்தம்பட்டி, தெக் கலூர், கருவலூர், கண்ணம்பாளையம்,  புதுப்பாளையம், நம்பியாம்பாளையம் உள்ளிட்ட விசைத்தறி தொழில் நடைபெ றும் மையங்களில் மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளையும் அடைக்கப்பட்டிருந்தது. வியாபாரிக ளின் கடையடைப்பு காரணமாக இப்பகு திகளில் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.  இந்நிலையில், போராட்டம் நடை பெறும் இடத்திலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில், தமிழக அரசின் கைத்தறி விற்பனை வாகனம் நிறுத்தப் பட்டு, கைத்தறி பொருட்கள் விற்பனை  செய்யப்படுகிறது. இது விசைத்தறியா ளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது. “தங்களுக்கு ஆதர வாக இருக்க வேண்டிய அரசு, இவ் வாறு செயல்படுவது நியாயமற்றது. இது எங்கள் போராட்டத்திற்கு எதிரான செயல்” என விசைத்தறியாளர்கள் குற் றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  அரசு இதுகுறித்து உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என போராட்டக்காரர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


விசைத்தறியாளர்கள் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு!

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் கூலி உயர்வு உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறியாளர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது  முழு ஆதரவை அளித்துள்ளது. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறியா ளர்களை செவ்வாயன்று நேரில் சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், கோவை மாவட்டச் செயலா ளர் சி.பத்மநாபன், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத்தலை வர் முத்துச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது இயக்கத்தின் ஆத ரவை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, உண்ணாவிரதப் பந்தலில் சி.பத்மநாபன் போராட்டத்தை வாழ்த்தி பேசுகையில், “விசைத்தறியாளர்களின் நியாய மான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. உங்களது உரிமைகளுக்காகவும், வாழ் வாதாரத்திற்காகவும் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி எப்போதும் துணைநிற்கும். மேலும், இப்பிரச்சினை குறித்து  அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், விசைத்தறியாளர்களின் கோரிக்கை களை முன்னெடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருக்கும்.  என்றார்.