tamilnadu

img

முதல்வரின் தலையீட்டை எதிர்பார்க்கும் நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள்!

நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் தமிழகத்தின் பிரதான ஜவுளி மையங்களாகத் திகழ்கின்றன. திருப்பூரில் பனியன் உற்பத்தி முன்னிலையில் இருந்தாலும், ஜவுளி ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பலவகையான ஜவுளி உற்பத்தியில் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.

இந்நிலையில், ஈரோடு, நாமக்கல் மாவட்ட ஜவுளித் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தி யாளர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அலட்சியத்தால் ஜவுளித் தொழில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேற்கு மாவட்டங்களின் பொருளாதார பல மாக திகழும் இத்தொழிலைப் பாதுகாக்க தமி ழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. விசைத்தறி மற்றும் ஜவுளித் தொழில்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் லுங்கி கள், துண்டுகள், இலவச வேட்டி, சேலைகள், காடா துணிகள், பாலிஸ்டர் ஜவுளிகள் ஆகி யவை ஈரோட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, பல்வேறு கட்டமைப்புப் பணிகளுக்குப் பிறகு  சந்தைப்படுத்தப்படுகின்றன. லட்சக்கணக் கான தொழிலாளர்கள் மற்றும் சிறு, குறு விசைத்தறி, ஜவுளி உற்பத்தியாளர்களைச் சார்ந்துள்ள இத்தொழில், தற்போது ஒன்றிய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் அழிவின் விளிம்பில் இருப்பதாக ஜவுளி உற்பத்தியாளர் கள் தங்கள் மனக் குமுறலை வெளிப்படுத்து கின்றனர். ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. மற்றும் நூல் விலை உயர்வு: ஈரோடு தினசரி ஜவுளிச் சந்தையில் கடை  வைத்துள்ள ரமேஷ் இதுகுறித்து பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்கள் விரோதச் செயல்களில் ஈடு பட்டு வருகிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஜவுளி களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும், ஜவுளிகளை ஏற்றி வரும் வாகனங் கள் ஜி.எஸ்.டி. பில்லுடன் வருகிறதா? என ஈரோடு மாவட்டத்தின் பல இடங்களில் அதிகாரி கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். ஜி.எஸ்.டி.  பில் அல்லது கொண்டு செல்லும் ஜவுளிகளில் ஏதேனும் சிறிய தவறு இருந்தாலும், அதிகாரி கள் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை அபராதம் விதிக்கிறார்கள். இதனால் சிறிய அளவில் விசைத்தறி கூடங்களை வைத்து ஜவுளி உற் பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப் படுகின்றனர். இதன் காரணமாக ஜவுளி உற் பத்தியாளர்கள் தங்கள் பொருட்களை விற்ப னைக்கு கொண்டு வருவதில் தயக்கம் காட்டு கின்றனர்,” என்றார். மாநில அரசின் அலட்சியம் ஜவுளிகளுக்கு சாயம் ஏற்றுவதற்கு சாயப் பட்டறைகள் மிக முக்கிய தேவையாக உள் ளன. மாநில அரசின் கவனிப்பின்மையால், சாயக்கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கப்படுகிறது. இதனால் ஏராள மான நோய் தொற்றுகள் பொதுமக்களுக்கு ஏற்படுகின்றன. அவ்வப்போது இதுகுறித்து  செய்திகள் வெளியாகும் போது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது போல பாசாங்கு செய்கி றார்கள். சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. மிகுந்த சிர மங்களுக்கிடையே சாயப்பட்டறைகளை இயக்கி, ஜவுளி நூல்களுக்கு சாயம் ஏற்றுவதா கக் கூறி, சாயப்பட்டறை உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தி செய்யும் உரிமையாளர்களி டம் வழக்கத்தை விட கூடுதல் விலை வைத்து விற்கிறார்கள். இதன் காரணமாக ஜவுளிகளின் அடக்க விலை அதிகரித்து, தோராயமாக ரூ.200க்கு விற்க வேண்டிய ஜவு ளியை ரூ.250க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஜவுளி களை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்ற னர். எனவே, தமிழக முதல்வர் இவ்விவகா ரத்தில் தலையிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. இலவச வேட்டி சேலைகள் சிறு நூல் ஜவுளி விற்பனையாளர் முத்துப் பாண்டி என்பவர் கூறுகையில், கோவை, திருப் பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஜவுளி சார்ந்த தொழில்கள் அதிகளவில் மேற்கொள் ளப்படுகின்றன. சமீப காலமாக பாலிஸ்டர் ரக ஜவுளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக் கப்பட்டு, பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் கூட சமீப காலமாக பாலிஸ்டர் ரகத்தில் வருகின்றன. முன்பு, இல வச வேட்டி சேலைகள் பருத்தி நூலால் தயா ரிக்கப்பட்டவை. அவை தாய்மார்கள் குழந்தை பிறந்த பிறகு தொட்டில் சீலையாகப் பயன் படுத்துவார்கள். ஏனெனில் அவை உறுதியாக வும், குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாகவும் இருக்கும். இது காலத்தின் மாற்றம் என்றாலும், மறைமுகமாக பருத்தி நூல் விளைவிக்கும் விவசாயிகளை பாதிக்கக்கூடிய செயல். பாலிஸ் டர் ஜவுளிகள் உடலின் வெப்பத்தை அதிகரித்து பாதிப்பு தரக்கூடியவை. பாலிஸ்டர் சார்ந்த  ஜவுளிகள் உற்பத்தி மற்றும் விற்பனை அதி கரிக்கும்போது, பருத்தி விளைவிக்கும் விவசா யிகள் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள். எனவே, தமிழக அரசு லட்சக்கணக்கான விவ சாயிகளின் துயரத்தைப் போக்கும் வகையி லும், பருத்தி நூல் சார்ந்த ஜவுளிகளை அதி கம் தயாரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்,” என் றார். மின்சார கட்டணம் சிறு ஜவுளி உற்பத்தியாளர் குமார் பேசு கையில், “திமுக அரசு கடந்த சட்டமன்றத் தேர்த லின் போது, விசைத்தறி தொழிலுக்கு மானிய விலையில் மின்சாரம் மற்றும் மாதத்திற்கு ஒருமுறை மின்சாரம் கணக்கெடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. அதை நம்பி விசைத்தறி தொழிலைச் சார்ந்த ஏராளமான தொழிலாளர்கள் திமுக அரசிற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திமுக அரசு விசைத்தறி தொழிலாளர்களை முழுமையாக மறந்து விட்டது. மின் கட்டண உயர்வு அதிகரித்த வண் ணம் உள்ளது. இதற்கு முந்தைய ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசுதான் காரணம் என திமுக அரசு கூறினாலும், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் திமுக அரசு ஏன் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றா மல் உள்ளது என்ற கேள்வியே மேலோங்கி உள்ளது,” என்றார். சங்கரன்கோவில், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, பல்லடம் என தமிழகத் தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விசைத் தறி தொழில் பிரதானமாக உள்ளது. இந்தத் தொழிலைச் சார்ந்து லட்சக்கணக்கான தொழி லாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இந்த விசைத்தறி தொழிலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வில்லை. தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிகச் சொற்ப அளவில் இயங்கும் கைத்தறி களுக்குக் கூட தமிழக அரசின் சார்பில் தனியாக கைத்தறித் துறை உள்ளது. அதற்காக பல் வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் தமிழகம் முழுவ தும் பரவலாக உள்ள விசைத்தறி தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் தமிழக அர சுக்கு போதிய அக்கறை இல்லை என்பதே நிதர்சனம். எனவே, இப்போதாவது, ஜவுளித் தொழிலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை விசைத்தறி தொழிலாளர்கள் மத்தியில் எழுந் துள்ளது. நெருக்கடியில் உள்ள விசைத்தறி மற்றும் ஜவுளித் தொழிலையும், பொதுமக்களின் உயிர் மூச்சாக, குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் காவிரி ஆற்றையும் பாதுகாத்திட தமி ழக முதல்வர் தொலைநோக்குப் பார்வையுடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள் ளது. -எம்.பிரபாகரன்

ஈரோடு வாழத் தகுதியற்றதாக மாறுகிறதா?

சமூக ஆர்வலர் கணேசன் பேசுகையில், “ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை வாழத் தகுதியற்ற மாவட்டமாக மாறி வருகிறது. விசைத்தறி மற்றும் ஜவுளி சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம் இருப்ப தால், ஜவுளி உற்பத்திக்குத் தேவையான நூல்களைத் தயாரிக்க சாயப்பட்டறைகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலான பட்டறைகள் சட்ட விதிகளுக்கு மாறாக செயல்படுகின்றன. அதீத லாப நோக்கில் சாயப் பட்டறை உரிமையாளர்கள் இரவு நேரத்தில் சுத்தி கரிக்கப்படாத சாயக்கழிவு நீரை நேரடியாக ஆற்றில் கலக்க விடுவதால், பொதுமக்களுக்கு ஏராளமான நோய் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் புற்றுநோயாளிகள் அதிகம் உள்ள மாவட்டமாக ஈரோடு உள்ளது என சமீபத்திய ஆய்வு மற்றும் சில பத்திரிகைகளில் செய்தியும் வந்ததை நீங்கள் கண்டி ருப்பீர்கள். அந்த அளவிற்கு வாழத் தகுதியற்ற மாவட்டமாக ஈரோடு மாறி வருகிறது,” என்றார். ஒவ்வொரு முறையும் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தரும் துறை சார்ந்த அதிகாரிகளும், அமைச்சர்களும் சாயக்கழிவு நீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும், பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண் போம் எனவும் கூறிச் செல்கிறார்கள். ஆனால் இன்ன மும் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாத நிலையே உள்ளது. அருகில் உள்ள நாமக்கல் மாவட்டத்திலும் இதே நிலைதான் உள்ளது. ஏற்க னவே பெருந்துறையில் சிப்காட் தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறி பாதிப்பை ஏற்படுத்துவதாக அங்குள்ள பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து நீண்ட பல வருடங்களாகவே பிரச்சனைகள் உள்ளன. இந்த விவகாரத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அஜாக்கிரதையாகவும் உள்ளது. சில இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்யும் போதே, அங்குள்ள பொதுமக்கள் அதை எதிர்க்கும் நிலையும் உள்ளது. பொது சுத்திகரிப்பு நிலையம் ஏன், எதற்காக அமைக்கப்படுகிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் முழுமையாகத் தெரியப்படுத்தி அவர்களின் பயத்தைப் போக்க வேண்டும். ஒவ்வொரு சாயப்பட்ட றையும் சாயக்கழிவு நீரை சுத்திகரித்துதான் வெளி யேற்றுகிறதா என்பதை தினந்தோறும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். புகாரின் பேரில் ஆய்வில் ஈடுபடும் அதிகாரிகள் சிறிய அளவில் செயல்படும் சாயப்பட்டறைகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக் கின்றனர். மிகப்பெரிய அளவில் சட்டவிரோதமாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆற்றில் கலக்கும் சாயப்பட்டறைகளைக் கண்டுகொள்வதில்லை. இத் தகைய போக்கால் ஈரோடு, நாமக்கல் மாவட்டம் மிகப் பெரிய பேரபாயத்தைச் சந்தித்து வருகிறது. தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் நிலவும் ஜவுளி சார்ந்த பிரச் சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அடுத்த தலை முறை பாதுகாப்பான சூழலில் நல்ல குடிநீரை, நல்ல காற்றைச் சுவாசிக்க தகுந்த சூழலை தமிழக முதல்வர் ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கான நடவடிக்கை களை எடுக்க வேண்டும், என்றார்.