குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 10) மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை நந்தனம் கருவூல ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கி.தங்கம் தலைமை தாங்கினார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஏ.வெற்றிராஜன், ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பி.சித்திரச்செல்வி, மாவட்டச் செயலாளர் பா.ஞானசௌந்தரி, பொருளாளர் என்.நிரஞ்சனாதேவி உள்ளிட்டோர் பேசினர்.