வனப்பகுதியில் தீ விபத்தை தடுக்க நடவடிக்கை
வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள னர். கோடைக்காலத்தில் வனப்பகுதி யில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், சருகுகள், காய்ந்த மரங்களை அகற்றும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். அடிக்கடி தீ விபத்து நிகழும் பகுதிகளை அடையா ளம் கண்டு அங்கு கண்காணிப்பு பணி களை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் படி, சேலம் மாவட்டத்தில் ஏற்காடு அடி வாரம், கன்னங்குறிச்சி, வலசையூர், வீராணம், கருங்காலி, செட்டிச்சாவடி, தேக்கம்பட்டி, குரும்பப்பட்டி, மஞ்சை யன்காடு, வத்திக்காடு, மூங்கில்பாடி, சிவதாபுரம், அரியானூர், காக்கா பாளையம், சித்தா்கோவில், இளம் பிள்ளை உள்ளிட்ட வனக்கிராமங்க ளில் வசிக்கும் மக்களிடையே தீ பற்றக் கூடிய பொருள்களை வனப்பகுதிக்கு எடுத்து செல்லக்கூடாது என அறிவுறுத் தப்பட்டது. வனப்பாதுகாப்பு சட்டத்தை மீறுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத் தின் கீழ் கைது செய்யப்படுவர் என எச் சரித்துள்ள வனத்துறையினர், பிற்பகல் 1 மணி முதல் 5 மணி வரை வனப்பகுதிக் குள் செல்வதை தடுக்க ரோந்துப் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்காட்டில் கேம்ப் பயருக்கு தடை
வனப்பகுதியில் தீ விபத்து நிகழாதவாறு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஏற்காட்டில் வனத்துறை, காவல் துறை, வருவாய் துறை, தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி தலைமை வகித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் ஆட்சியர் பேசுகையில், அடர் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படாதவாறு கண்காணிக்கும் வகையில் சேலம் வனக் கோட்டத்துக்கு 4 டிரோன் கேமராக்கள் மற்றும் ஆத்தூர் வனக் கோட்டத்துக்கு ஒரு டிரோன் கேமரா வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஏற்காட்டில் கேம்ப் பயருக்கு ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் தடை விதிக்கப்படுகிறது. ஏற்காடு, கருமந்துறை ஆகிய இரண்டு மலைப் பகுதி களில் உள்ள தீயணைப்பு நிலையங்களை ஏற்காடு - 73050 95785, கருமந்துறை - 04292 244803, 75503 96101 ஆகிய எண்களில் தொர்பு கொள்ள லாம். மேலும், காட்டுத்தீ தொடர்பான தகவல்களை 0427 2415097 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 1800 599 0427 என்ற கட்டணமில்லா சேவை எண்ணிலோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.