tamilnadu

img

ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்!

ஜூலை 9 பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்!

சிஐடியு கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம்

கோவை, ஜூன் 29- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கண் டித்து ஜூலை 9 ஆம் தேதி நடை பெறவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம் என சிஐடியு கோவை மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய தொழிற்சங்க மையத் தின் (சிஐடியு) கோவை மாவட்ட 14  ஆவது மாநாடு, வரதராஜபுரம் சாய்  விவாகா மஹாலில் தோழர் எஸ். ஆறுமுகம் நினைவரங்கில் ஞாயி றன்று நடைபெற்றது. முன்னதாக, தியாகிகள் ஜோதிப்பயணம் மாவட் டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி தலைமையில், திரளான செஞ் சட்டை தோழர்களுடன் உப்பிலி பாளையம் தியாகி முத்து மேடை யிலிருந்து புறப்பட்டு மாநாட்டு அரங்கை வந்தடைந்தது. சின்னியம் பாளையம், ஸ்டேன்ஸ் மில், தியாகி  முத்து நினைவு ஜோதிகளை மாவட்ட துணைத்தலைவர்கள் ஆர்.கேசவமணி, எம்.வேளாங் கண்ணி ராஜ், சி.துரைசாமி ஆகி யோர் எடுத்துக்கொடுக்க, மாவட்ட  துணைச்செயலாளர்கள் பி.நவ நீதகிருஷ்ணன், எம்.கே.முத்துக் குமார், ஆர்.சரவணன் ஆகி யோர் பெற்றுக்கொண்டனர். துணைத்தலைவர் பி.சந்திரன் செங் கொடியை ஏற்றி வைத்தார். மாவட் டத் தலைவர் கே.மனோகரன் தலைமையில் துவங்கிய மாநாட் டில், துணைத்தலைவர் கே.ரத்தின குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். துணைச்செயலாளர் ஆர்.ராஜன் வரவேற்றார். மாநிலத் தலைவர் அ.சவுந்திரராசன் துவக்க வுரையாற்றினார். மாவட்டச் செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி ஆகி யோர் அறிக்கைகளை முன்வைத் தனர். இம்மாநாட்டில், ஜூலை 9 ஆம்  தேதி நடைபெறவுள்ள பொது  வேலை நிறுத்தத்தை வெற்றிகர மாக்க வேண்டும். ஸ்மாட் மீட்டர்  பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். சூயஸ் நிறுவன ஒப் பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்க ளுக்கு ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பைக் டாக்சி திட்டத்தை ரத்து செய்து,  ஆட்டோ தொழிலாளர்களக்கு இஎஸ்ஐ திட்டத்தை அமல் படுத்த வேண்டும். தங்கநகைத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி சட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். பூ வியாபாரி கள், பூ மார்கெட் பகுதியில் அமர்ந்து  பணிபுரிய தனி இடம் ஒதுக்க வேண்டும். போக்குவரத்து துறை யிலுள்ள ஒப்பந்த தொழிலாளர் களை பணி நிரந்தரப்படுத்த வேண் டும். தனியார் மினி பேருந்து திட் டத்தை அரசே எடுத்து நடத்த வேண் டும். உள்ளாட்சி ஊழியர் பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். பவானி ஆற் றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து  நிறுத்த வேண்டும். ஏழை, எளிய  மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவராக கே.மனோகரன், செயலாளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளா ளராக ஆர்.வேலுசாமி, துணைத் தலைவர்களாக எம்.ஏழுமலை, இ. என்.ராஜகோபால், எம்.வேளாங் கண்ணிராஜ், கே.ரத்தினகுமார், சி. துரைசாமி, ஏ.எம்.ரபீக், என்.சிவ ராஜ், எம்.ஆனந்தகுமார், துணைச் செயலாளர்களாக ஆர்.ராஜன், ஏ. ஜான்அந்தோணிராஜ், எம்.கே. முத்துக்குமார், பி.நவநீதகிருஷ் ணன், ஆர்.சரவணன், டி.கோபால கிருஷ்ணன், கே.சந்தோஷ், வி. ரம்யா, பி.சத்யா ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன் நிறைவுரை யாற்றினார். டி.கோபாலகிருஷ் ணன் நன்றி கூறினார்.

கடும் போராட்டங்கள் நடைபெறும்

சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திரராசன் பேசுகையில், ஒன்றிய பாஜக அரசு 29 தொழிலாளர் சட்டங்களை சிதைத்து, உரிமைகளை பறித்து, 4 தொகுப்பு சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதில் காண்ட் ராக்ட் முறையில் தொழிலாளர்களை பணியமர்த்துவது, குறைந்த ஊதி யம், வேலை நேரம் அதிகரிப்பு போன்ற அநியாயங்கள் அடங்கி யுள்ளன. 100 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் தொழிற்சாலை களுக்கு பொருந்திய சட்டங்கள், இனி 300 தொழிலாளர்களுக்கு மேல்  இருந்தால் மட்டுமே பொருந்தும் என மாற்றப்பட்டு, 90 சதவிகித தொழிலாளர்கள் சட்ட பாதுகாப்பில் இருந்து வெளியேற்றப்படு வார்கள். பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவது, குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.26 ஆயிரமாக நிர்ணயிக்க மறுப் பது, ஓய்வூதியம் மறுப்பது, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட் டத்திற்கு நிதி குறைப்பது, அங்கன்வாடி, சத்துணவு, மக்களை தேடி  மருத்துவம் போன்ற திட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு குறைந்த ஊதியம், பணி நிரந்தரமின்மை ஆகியவை மக்க ளின் உரிமைகளை பறிக்கின்றன. மேலும், போனஸ் உள்ளிட்ட உரிமை களை பறிப்பது, தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதி யம் மறுப்பது, தொழிற்சங்க உரிமைகளை முடக்குவது, பொது இடங் களில் ஜனநாயக அமைப்புகளின் கொடிக்கம்பங்களை அகற்றுவது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை. இவற் றுக்கு எதிராக, ஜூலை 9 அன்று 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங் கள் இணைந்து நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. 25 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், குறிப்பாக முறைசாரா தொழிலாளர்கள் பங்கேற்கவுள்ளனர். ஒன்றிய  அரசு தொழிற்சங்க தலைவர்களுடன் பேச்சு நடத்தி, தொழிலாளர் விரோத சட்டங்களை கைவிட வேண்டும். இல்லையெனில், தொழி லாளர்களிடையே கடும் போராட்டங்கள் வெடிக்கும், என்றார்.