தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்திடுக மே தினப் பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
நாமக்கல், மே 2- தொழிலாளர்களின் பணிப் பாது காப்பை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும், என மே தினப் பொதுக்கூட்டத்தில் தலை வர்கள் வலியுறுத்தினர். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு உரு வாக்க வேண்டும். அவுட்சோர்சிங், ஒப்பந்த முறைகளை கைவிட வேண் டும். தொழிலாளர்களின் பணிப் பாது காப்பை உறுதி செய்ய வேண்டும். தொழிலாளர்கள் விரோத சட்டங் களை திரும்பப்பெற வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 139 ஆவது உலக தொழிலா ளர் தினம் வியாழனன்று கொண்டா டப்பட்டது. இதன்ஒருபகுதியாக, சிஐடியு மற்றும் ஏஐடியுசி சார்பில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் பொதுக்கூட்டம் நடைபெற் றது. முன்னதாக, ராயல் தியேட்டர் பகுதியிலிருந்து தொடங்கிய பேர ணியில் நூற்றுக்கணக்கானோர் செங்கொடிகளை ஏந்தியபடி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர். இதன்பின் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் எம். அசோகன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் சிறப் புரையாற்றினார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்த சாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, நிர்வாகிகள் ரங்க சாமி, சுரேஷ், எம்.கணேச பாண்டி யன், எம்.ஆர்.முருகேசன், துரை சாமி, முத்துக்குமார், சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் லட்சுமணன் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடி வில், சிஐடியு நிர்வாகி கே.மோகன் நன்றி கூறினார். சேலம் இதேபோன்று, சேலம் அம்பேத் கர் சிலை முதல் கோட்டை மைதா னம் வரை தொழிலாளர்கள் பேரணி நடைபெற்றது. பேரணியை ஏஐடி யுசி மாவட்டச் செயலாளர் எஸ். சம்பத் துவக்கி வைத்தார். இதைய டுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத் திற்கு, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். ஏஐடியுசி தேசியக்குழு உறுப்பினர் எம்.முனு சாமி வரவேற்றார். சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன், தலைவர் எஸ்.காசி விஸ்வநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மத்திய, மாநில ஊழியர் சங்க தலைவர்கள், தொழிற்சங்க நிர்வா கிகள் உட்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில், சிஐடியு மாவட்டச் செயலாளர் கோவிந்தன் நன்றி கூறி னார். சேலம் மாவட்டத்தில், மார்க் சிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு சார்பில் பல்வேறு இடங்களில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டிச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.