tamilnadu

img

குடியரசு துணைத் தலைவரை கண்டித்து திருப்பூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

குடியரசு துணைத் தலைவரை கண்டித்து திருப்பூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஏப்.24- அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு பதவியேற்ற குடியரசு துணைத் தலைவர் உச் சநீதிமன்ற தீர்ப்பில் தலையிடுவது கண்டிக் கத்தக்கது. எனவே உடனடியாக பதவி விலக  கோரி வியாழனன்று அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற வளாகம்  முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் குறிப் பிட்ட காலத்திற்குள் சட்டமன்ற, நாடாளுமன் றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக் கள் மீது முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும்  அண்மையில் திருத்தப்பட்ட வக்பு திருத்த  சட்டத்திற்கும் உச்ச நீதிமன்றம் தடை உத்த ரவு பிறப்பித்தது. இரு வேறு உச்ச நீதிமன்ற  தீர்ப்புகளுக்கு எதிராக பாஜக எம்.பி நிஷி காந்த் துபே மற்றும் குடியரசுத் துணைத் தலை வர் ஜகதீப் தன்கர் ஆகியோர் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்திருந்தனர். உச்ச நீதி மன்றத்தின் மாண்பை அச்சுறுத்தும் வகை யில் கருத்து தெரிவித்த குடியரசு துணைத்  தலைவரை கண்டித்து திருப்பூர்  நீதிமன்றம்  எதிராக வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாவட் டப் பொருளாளர் உதயசூரியன் தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் மோகன்  சிறப்புரையாற்றினார். இதில், இந்திய அரசிய லமைப்பு சட்டத்திற்குட்பட்டு பதவியேற்ற  குடியரசு துணைத் தலைவர் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தலையிடுவது கண்டிக்கத்தக்கது. எனவே உடனடியாக இருவரும் பதவி வில கிட வேண்டும். சுதந்திரமான நீதிமன்ற நடவடிக்கைகளை பாதுகாக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இத்து டன் காஷ்மீரில் அப்பாவி பொதுமக்களை படு கொலை செய்த பயங்கரவாதிகளின் செயலை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாநிலச் செயலாளர் மணவா ளன், தேசியக் குழு உறுப்பினர் பொன்ராம்,  மாநிலக்குழு உறுப்பினர் அமர்நாத், மூத்த வழக்கறிஞர் வை.ஆனந்தன் மற்றும் மாவட்ட  நிர்வாகிகள் உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர்.