tamilnadu

img

ஜேசிபி உரிமையாளர்கள் 5 நாள் வேலை நிறுத்தம்

ஜேசிபி உரிமையாளர்கள் 5 நாள் வேலை நிறுத்தம்

கோவை, ஏப்.11– ஜேசிபி உரிமையாளர்கள் ஐந்து  நாட்கள் வேலை நிறுத்தம் அறிவித் துள்ள நிலையில், கோவையில் 2000-க்கும் மேற்பட்ட எர்த் மூவர்ஸ் வாகனங்கள் முடங்கின. கோவை மாவட்டத்தில் டீசல், ஜேசிபி உதிரி பாகங்கள் மற்றும் புதிய வாகனங்களின் விலை உயர்வு,  வாகன காப்பீடு, சாலை வரி அதிக ரிப்பு ஆகியவற்றால் ஜேசிபி வாக னங்களை லாபகரமாக இயக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளதாக கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கம் தெரிவித்துள்ளது. இத னைக் கண்டித்தும், வாடகை உயர்த்ததுவதை வெளிப்படுத்தும் வகையிலும், ஏப்ரல் 10 முதல் 14 வரை 5 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது.  இதன்படி, கோவை மாவட்டத் தின் அன்னூர், கோவில்பாளையம், சரவணம்பட்டி, சூலூர், கருமத்தம் பட்டி உள்ளிட்ட புறநகர் பகுதிக ளில் இயங்கி வரும் ஜே.சி.பி, பொக் லைன், ஹிட்டாச்சி உள்ளிட்ட 2 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட எர்த் மூவர்ஸ் வாகனங்கள் ஏப்ரல் 10 முதல் முழுமை யாக முடங்கின. இந்த வேலை நிறுத் தத்தால் கட்டுமானப் பணிகள், சாலைப் பணிகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து எர்த் மூவர்ஸ் உரி மையாளர்கள் கூறுகையில், “விலை உயர்வால் எங்களால் வாகனங் களை இயக்க முடியவில்லை. எங் கள் அத்தியாவசிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 5 நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளோம்.” என்றனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட் டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் வலியுறுத்தினர்.

விபத்து: இளைஞர்  பலி

தருமபுரி மாவட்டம், மஞ் சநாயக்கனஅள்ளி ஊராட்சி, சாமியார் கொட்டை பகுதி யைச் சேர்ந்தவர் சந்தோஷ் (29). இவர் தனது நண்பர்கள் மூவருடன் வியாழனன்று இருசக்கர வாகனத்தில் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆதனூர்  பிரிவு சாலை அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த டிராக்டர் மோதியதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் நிகழ்விடத்திலேயே உயிரி ழந்தார். மேலும், காயம டைந்த அவரது நண்பர்க ளான வேல்முருகன், தர்ஷன் ஆகியோர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.