கோவை, ஜன.29- கோவை மத்திய சிறையில் கைதி ஒருவர் மர்ம மரணம் அடைந்ததை தொடர்ந்து துணை சிறை அதிகாரி உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கோவை மத்திய சிறையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் (33) என்பவர் திருப்பூரில் நடைபெற்ற கொலை வழக்கில் தண்டனை பெற்று கோவை மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வெவ்வாயன்று காலை அவர் சிறையில் உள்ள தொழிற்கூடத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் மாயமான அவர், நீண்ட நேரமாகியும் வரவில்லை. சிறைத்துறை அதிகாரிகள் அவரை தேடியபோது அக்கிருந்த கழிப்பறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். ஏசுதாஸின் கழுத்து எலும்பு முறிந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஏசுதாஸ் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல் வெளியானது. அவர் கழிப்பறையில் மயங்கி கீழே விழுந்து கழுத்து எலும்பு முறிந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. அதே போல ஏசுதாஸ் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. இச்சம்பவம் குறித்து பந்தய சாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சிறை வளாகத்தில் ஏசுதாஸ் பணியாற்றிய தொழிற்கூடம் மற்றும் சிறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மத்திய சிறையில் கைதி அடையாளம் தெரியாத முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் துணை சிறை அதிகாரி மனோரஞ்சிதம், உதவி சிறை அதிகாரி விஜயராஜ், முதன்மை தலைமை காவலர் பாபுராஜ், காவலர் தினேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யபட்டனர்