கோவை, ஜூன் 11- கோவையில் காவல்துறை யினரின் பாதுகாப்போடு பவர்கிரிட் அதிகாரிகள் உயர்மின் கோபுரத்தை அமைக்க விளை நிலங்களை அள வீடு செய்து வருவதை கண்டித்து விவ சாயிகள் உயர் மின் கோபுரங்களில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் பவர் கிரிட் நிறு வனம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு மின்சா ரம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டம், புகளூர் அருகே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. உயர் மின் கோபு ரங்கள் மூலம் மின்சாரத்தை விளை நிலங்கள் வழியாக கொண்டு வந்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப் பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட வுள்ளது. உயர் மின் கோபுரங்கள் விளை நிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவ சாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தல் காரணமாக நில அளவீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நில அளவீடு பணிகளை பவர் கிரிட் நிறுவனம் மீண்டும் துவங்கி யிருக்கிறது. செவ்வாயன்று கோவை மாவட்டம், சோமனூரை அடுத்த கரு மத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நில அளவீடு பணியை அதிகாரிகள் நடத்தி னர்.
இதற்கு நிலத்தின் உரிமையா ளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் காவல்துறையி னரின் பாதுகாப்போடு விவசாயி களை மிரட்டி நில அளவீடு பணியை தொடர்ந்தனர். இதனால் ஆவேச மடைந்த விவசாயிகள் தங்களது நிலத் தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனையடுத்து விவசாயிகளை குண்டுக்கட்டாக காவல்துறையினர் தூக்கிச் சென்று கைது செய்தனர். இதேபோல், கோவை செம்மாண் டம்பாளையம் கிராமத்தில் நில அள வீடு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அங்குள்ள டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போ தும் நில அளவீடு பணியை நிறுத்த வில்லையெனில், மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவ தாகவும் எச்சரித்தனர். இதனைத் தொடர்ந்து டவரில் ஏறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை சமா தானப்படுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், எங்களை பொறுத்தவரை இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படு வதற்கு பதிலாக, புதை வழித்தடமாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. தங்களின் நிலத்தின் மதிப்பும் என்றும் குறை யாது என்பதால், மாற்று திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்றே கேட்கிறோம். ஆனால், விளை நிலங்களின் வழியாகத்தான் இந்த மின்கோபுரத்தைக் கொண்டு செல்வோம் என அரசு பிடிவாதமாக இருப்பதை ஏற்கமுடியாது. எங்களை தீவிரமான போராட்டத்திற்கு அரசு தள்ளக்கூடாது என்பதை கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.
எம்.பி. கண்டனம்
விளைநிலங்களில் உயர்மின்கோ புரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவ சாயிகளைக் காவல் துறையினரைக் கொண்டு அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கையை கோவை மக்க ளவை தொகுதி உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கண்டித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுசம்பந்தமான கருத்து கேட்பு கூட்டத்திலேயே விவசாயிகள் தங்களின் அழுத்த மான ஆட்சேபனையைத் தெரி வித்துள்ளார்கள். இதற்கு முன்னர் விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைத்துக் குறைந்த அழுத்த மின்சார கேபிள்கள் கொண்டு சென்றனர். தற்போது அமைக்கப்படும் மின்கோபுரங்கள் மிக அதிக அளவி லான 400 வோல்ட் மின்சாரத்தைக் கொண்டு செல்ல கம்பி கள், கேபிள்கள் அமைக்க இந்த மின் கோபுரங்கள் அமைக்கப் படுகிறது. இது தங்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக் கும் என விவசாயிகள் கூறியுள்ளார் கள். இந்நிலையில், புதைவட சட்ட (கேபிள் ஏக்ட்) அடிப்படையில் அடா வடியாக மாநில அரசை இணைத்துக் கொண்டு காவல் துறையின் உதவி யுடன் பவர் கிரிட் நிறுவனம் விவசாயி களை அச்சுறுத்துவது, மிரட்டுவது, தாக்குவது, கைது செய்து சிறையில் அடைப்பது போன்ற பல அராஜக நட வடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் கள். இது ஜனநாயக அரசு செய்கின்ற பணி அல்ல என்பதை தெரியப்படுத்து கிறோம். இப்போதுதான் சூலூர் மக்கள் சட்ட மன்ற இடைத்தேர்தலில் அதிமுகவை தேர்ந்தெடுத்தார்கள். தனக்கு வாக்க ளித்த மக்களையே மீண்டும் வதைக் கிற அரசாக அதிமுக அரசு உள்ளது. மாநில அரசு காவல் துறையைக் கட்டுப் பாடற்ற முறையில் விவசாயிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதை வன் மையாக கண்டிக்கிறேன். உடனடி யாக இத்தகைய நடவடிக்கையை நிறுத்த வேண்டும். கைது செய்யப் பட்ட விவசாயிகளை எவ்வித நிபந்த னையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி கூறியுள்ளார்.