ஏழை மாணவர்களின் சர்வதேச விளையாட்டு போட்டி கனவுகளுக்கு…
- கவி - கோவை, ஏப்.25- கோவை அரசு விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சி பெறும் பள்ளி மாணவர்கள், சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொள்ளும் கனவுகளுடன் தீவிரமாக தயாராகி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் விளையாட் டுத் துறையின் கீழ், மாநிலம் முழு வதும் 11 மாணவர்களுக்கான விளை யாட்டு விடுதிகளும், 7 மாணவிக ளுக்கான விளையாட்டு விடுதிகளும் இயங்கி வருகின்றன. இந்த விடுதிக ளில் சேருவதற்கு மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப் பிக்க வேண்டும். பின்னர், மாவட்ட அளவிலான நேர்முகத் தேர்வு மற் றும் சென்னையில் நடைபெறும் இரண் டாம் கட்ட நேர்முகத் தேர்வு ஆகிய வற்றில் தேர்ச்சி பெற்ற பிறகு, கலந் தாய்வு மூலம் அவர்கள் விரும்பும் மாவட்ட விளையாட்டு விடுதிகளில் சேர்க்கப்படுகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள விளையாட்டு விடுதியில் தற்போது 60 மாணவர்கள் தங்கிப் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற மாணவர்கள், குறிப்பாக ஏழை எளிய மற்றும் ஒற்றைப் பெற் றோர் குடும்பங்களைச் சேர்ந்த குழந் தைகள் தங்கிப் பயிற்சி பெறுகின்ற னர். கோவையில், கையுந்து பந்து (வாலிபால்), கூடைப் பந்து (பேஸ் கெட்பால்) மற்றும் தடகளப் போட்டி களில் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த விடுதியில் தங்கி, அருகிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கல்வி கட்டணம் ஏதுமின்றி பயின்று வரு கின்றனர். விளையாட்டு விடுதியில் தங்கி யுள்ள மாணவர்களுக்கு தினமும் காலை 5.30 மணிக்கு ரோல் கால் நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 8 மணி வரை தீவிரமான விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. பின்னர் பள்ளிக்குச் செல் லும் மாணவர்கள், மாலை 5 மணி முதல் 8 மணி வரை மீண்டும் பயிற்சி மேற்கொள்கின்றனர். மாணவர்க ளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, காலையில் பாதாம் உள் ளிட்ட பருப்பு வகைகள், இரண்டு முட்டைகளுடன் உணவு வழங்கப்படு கிறது. மதிய உணவில் காய்கறிகள் மற்றும் முட்டையும், இரவு உணவில் அசைவ உணவும் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.2 ஆயி ரம் மதிப்பிலான காலணி மற்றும் விளையாட்டு உடைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இத னால் மாணவர்கள் அதிக கவனத்து டன் விளையாட்டில் ஈடுபட்டு பல் வேறு பதக்கங்களை வென்று வரு கின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறைக்கு தற்போது அதிக முக்கியத்துவம் அளித்து வரு கிறது. சமீபத்தில் சென்னையில் நடை பெற்ற செஸ் ஒலிம்பியாட், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கார் பந்தயம் போன்ற சர்வ தேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த் துள்ளது. கோவையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம், ஹாக்கி மைதானம் மற்றும் நேரு விளையாட்டு உள் அரங்க மேம்பாட் டுப் பணிகள் நடைபெற்று வருகின் றன. மேலும், நமக்கு நாமே திட்டத் தின் கீழ் கூடைப்பந்து விளையாட்டுக் கான செமி-உள் அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், விடுதியில் தங்கும் மாண வர்களின் ஒரு நாள் உணவுச் செல வுத்தொகை ரூ.250 லிருந்து ரூ.350 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் களுக்கு அரசு வேலையில் 3 சதவீ தம் இடஒதுக்கீடு வழங்கியிருப்பது, விளையாட்டின் மீது மாணவர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள் ளது. கோவையில் உள்ள விளை யாட்டு விடுதியில் பயிற்சி பெற மதுரை, நெல்லை போன்ற பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் ஆர்வத்து டன் இணைந்துள்ளனர். ஒவ்வொரு மாணவரும் பல்வேறு கனவுகளுடன் பயிற்சி பெற்று வரும் நிலையில், அவர்களின் கனவுகளை நனவாக் கும் வகையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் உறுதுணையாக இருப்ப தாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கோவையில் உள்ள விளை யாட்டு விடுதியில் தங்கிப் பயிற்சி பெறும் மாணவர்கள் பல்வேறு சாத னைகளை படைத்து வருகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், கையுந்து பந்து போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். பீச் வாலிபால் போட்டியில் இரு மாணவர்கள் தேசிய அளவில் தேர்வாகியுள்ளனர். இதேபோல், கூடைப்பந்து போட்டியில் மூன்று தேசிய அளவிலான பதக்கங்களை யும், தடகளப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களையும் வென்றுள்ளனர். விளையாட்டுத் துறைக்கு அரசு எடுத்து வரும் இந்த நடவடிக்கைகள் மாணவர்கள் மட்டுமின்றி, பெற் றோர்கள் மத்தியிலும் பெரும் வர வேற்பைப் பெற்றுள்ளன.