மயங்கி விழுந்த யானைக்கு தீவிர சிகிச்சை
கோவை, மே 18- மருதமலை வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த பெண் காட்டு யானைக்கு கால்நடை மருத்து வக்குழுவினர் சிகிச்சையளித்து வருகின்றனர். கோவை மாவட்டம், மருதமலை வனப்பகுதியில் சனி யன்று மாலை வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு உடல் நல குறை வால் பெண் காட்டு யானை மயங்கி விழுந்திருந்தது தெரிய வந்தது. மேலும், அதன் அருகே ஒரு வயது குட்டியானை யும் இருந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவ குழுவினர், காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமான தால் கூடுதலான காட்டு யானைகள் அங்கு வந்தது. இதனால் சிகிச்சை அளிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஞாயிறன்று காலை முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிரேன் உதவி யுடன் பெண் யானை நிறுத்தி வைக்கப்பட்டு குளுக்கோஸ், நோய் எதிர்ப்பு மருந்துகள் செலுத்தி கால்நடை மருத்து வர் குழுவினர் சிகிச்சையளித்து வருகின்றனர். மருதமலை வனப்பகுதியை ஒட்டி உள்ள சோமையம் பாளையம் ஊராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கிற்கு இந்த யானை அடிக்கடி வந்து சென்றுள்ளது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் ஏதேனும் சாப்பிட்டதால் பிரச்சனை ஏற் பட்டுள்ளதா? என்ற அடிப்படையில் மருத்துவர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் யானை குணமடைந்து வனப்பகுதிக்குள் செல்வதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. யானை நிற்க முடியாத நிலையில் இருந்து, தற்போது தானாக நிற்கும் நிலைக்கு வந்துள்ளது. தாயு டன் இருந்த குட்டி யானை வனப்பகுதிக்குள் வேறு ஒரு கூட்டத் துடன் சென்றுள்ளது. அதனை வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். யானை முழுமையாக குண மடையும் வரை தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்க நடவ டிக்கை எடுக்கப்படும், என்றார்.
ரூ.15 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு
சேலம், மே 18- அரசுப்பணி வாங்கித் தருவதாகக்கூறி சேலத்தை சேர்ந்த பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த கேரளத்தைச் சேர்ந்த 4 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள னர். சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி, சாமிநாதபுரத்தை சேர்ந்த வர் கிறிஸ்டி வசந்தா (41). இவரது நண்பர் அஜித் மூலம் கேர ளம் மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அபுபக்கர், சாஜிர், சிஜி, சிக்கர் ஆகிய நால்வரும் கப்பல் துறை அமைச்சகத் தில் வேலை வாங்கிக் தருவதாகக்கூறி கிறிஸ்டி வசந்தாவி டம் ரூ.15 லட்சம் கேட்டுள்ளனர். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த நால்வரிடம் ரூ.15 லட்சத்தை கிறிஸ்டி வசந்தா வழங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு, வேலை வாங்கித்தரவில்லை. இத னால் பணத்தை திருப்பிக் கேட்ட கிறிஸ்டி வசந்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து கிறிஸ்டி வசந்தா அளித்த புகாரின் பேரில், பள்ளப் பட்டி காவல் துறையினர் அபுபக்கர், சாஜிர், சிஜி, சிக்கர் ஆகி யோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கனமழை: போக்குவரத்து பாதிப்பு
கோவை, மே 18- கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் முக்கிய சாலைகளில் நீர் பெருக் கெடுத்து ஓடியது. லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் காந்திபுரம், ரயில் நிலையம், ராமநாதபுரம் உள்ளிட்ட மாநகர் மற்றும் தொண்டாமுத்தூர், நர சிபுரம், ஆலாந்துறை, மருதமலை உள்ளிட்ட புறநகர் பகுதி களிலும் ஞாயிறன்று பலத்த காற்றுடன் கனமழை கொட் டித்தீர்த்தது. இதனால் விமான நிலையம், அவிநாசி சாலை, திருச்சி சாலை, ரயில் நிலையம் அருகே மழைநீர் சாலைக ளில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அவிநாசி சாலையில் மரக்கிளை முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அங்குச் சென்ற ஒயர்களும் துண்டித்து சாலையில் விழுந்ததால் வாகனங் கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஒரு வழி பாதையில் வாகனங்கள் சென்றது. மேலும் முன்னெச்சரிக்கை யாக சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கு களை எரியவிட்டவாறு சென்றனர். அதேபோல, கனமழை யால் லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கி யது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரில் ஊர்ந்த வாறு வாகனங்கள் சென்றது. இதேபோல, கோவை நீதி மன்றம் அருகே உள்ள பெட்ரோல் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்ததால் பெட்ரோல் விநியோகம் நிறுத்தப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக உயிரி தொழில்நுட்ப மையத்தில், ‘மாடி தோட்டத்தில் வெட்டிவேர் சாகுபடி’ என்ற தலைப்பில் சனியன்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று, பயனடைந்தனர்.
சந்தன மரம் கடத்தல்: 7 பேர் மீது வழக்கு
உதகை, மே 18- உதகையில் சந்தன மரம் கடத்த முயன்ற 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட் பட்ட காந்தல் திருவள்ளூர் காலனி பகுதியில் பாபு என்பவர் சந்தன மரம் வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் பாபுவின் வீட்டில் வனத் துறையினர் சென்று ஆய்வு மேற்கொண்ட தில், சாக்கு பையில் 25 கிலோ எடையுள்ள சந்தன மரம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதனைத்தொடர்ந்து சந்தன மர துண்டுகளை கைப்பற்றிய வனத்துறையினர், பாபுவிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், பாபு மற்றும் உதகை மெயின் பஜார் பகுதியில் வசிக்கும் முகமது ரபிக் ஆகிய இரு வரும், வாழைத்தோட்டம் பகுதிக்கு சென்று சந்தன மரத்தை சிறிது சிறிதாக உதகைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது. இதைய டுத்து முகமது ரஃபீக்கிடம் வனத்துறையி னர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த நந்த கோபால், அவரது நண்பர்களான கார்த்திக், சந்தோஷ், மணிகண்டன், விஜய் ஆகிய ஐந்து பேரும் பணத்திற்காக வாழைத்தோட் டம் அருகில் உள்ள பட்டா நிலத்தில் சட்ட விரோதமாக சந்தன மரங்களை வெட்டி உதகையில் வசிக்கும் பாபுவிடம் தவணை முறையில் கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சந்தன மர கடத்தலில் ஈடு பட்ட 7 பேர் மீது உதகை தெற்கு வனச்சர கத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.5 லட் சம் அபராதம் விதித்து, மாவட்ட வன அலுவ லர் கௌதம் உத்தரவிட்டுள்ளார்.
இரட்டை கொலை விவகாரத்தில் 3 பேர் கைது
கோபி, மே 18- சிவகிரி அருகே இரட்டை கொலை விவ காரத்தில் போலீசார் மூன்று பேரை கைது செய்து, தொடர்ந்து கடத்தூரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், சிவகிரி பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ராமசாமி, அவரது மனைவி பாக்கியம் கடந்த 1 ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து கொலையாளிகளை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களில் பல குற்றவாளிகள் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த இரட்டை கொலை குறித்த விசாரணை தொடர்பாக கடத்தூர் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 3 பேரிடம் விசாரணை மேற் கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளி யாகி உள்ளது. இதனைதொடர்ந்து அச்சியப்பன், ரமேஷ், மாதேஷ் ஆகியோரை பிடித்து கோவை சரக ஐஜி செந்தில்குமார், டிஐஜி சசி மோகன், ஈரோடு மாவட்டம் எஸ்பி சுஜாதா ஆகியோர் கடத்தூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காலை முதல் மதியம் வரை பல்வேறு கோணங்களில் நடைபெற்ற விசாரணையில் சிவகிரி கொலை சம்பவத் தில் ஈடுபட்டதும் பல்லடம் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என முதற்கட்ட விசா ரணையில் தெரிந்து மூவரையும் கைது செய்து போலிசார் தொடர்ந்து விசாரணை யில் ஈடுபட்டு வருகின்றனர்.