tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு எடப்பாடி குறித்து ஐ.லியோனி கிண்டல்

நாமக்கல், மார்ச் 31– சாயப்பட்டறையில் விழுந்த நரியின் வேஷம் கலைந்து விட்டதாக திமுக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி எடப் பாடி குறித்து விமர்சித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் திமுக சார்பில் ஞாயிறன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளரு மான திண்டுக்கல் ஐ.லியோனி உரையாற்றினார். அப்போது அவர், “எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணி அமைப் பதற்காக தில்லியில் அமித்ஷா உள்ளிட்ட பாஜக நிர்வாகி களைச் சந்தித்துவிட்டு, அதை பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாத நிலையில் இருக்கி றார். முறையான கூட்டணி கூட அமைக்க முடியாமல் எடப் பாடி பழனிச்சாமி தடுமாறி வருகிறார். சாயப்பட்டறை கழிவு நீரில் விழுந்த நரி ஒன்று தன்னை ராஜாவாக நினைத்துக் கொண்டு செயல்படுகிறது. திடீரென பெய்த மழையின் காரண மாக நரியின் சாயம் வெளுத்துப் போச்சு! ராஜா வேஷம் கலைந்து போச்சு” என்று பாடலைப் பாடி விமர்சித்தார்.

தொட்டிப்பாலத்தில் குளிக்க தடை

கோபி, மார்ச் 31– ஈரோடு மாவட்டம், கோபி அருகே வாணிப்புதூர் அரக்கன் கோட்டை வாய்க்காலில் அமைந்துள்ள தொட்டிப்பாலத்தில் குளிக்க நீர்வளத்துறை தடை விதித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோக்களால், பல் வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இந்த தொட் டிப்பாலத்தில் குளிக்க குவியத் தொடங்கினர். இதில், சிலர் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை விவசாய நிலங்களில் வீசி உடைத்ததுடன், விவசாயிகளையும் தாக்கியுள்ளனர். இத னைத்தொடர்ந்து விவசாயிகளின் புகாரின் அடிப்படையில், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தவும், தொட்டிப்பாலத்தில் குளிக்கவும், மது  அருந்தவும், சமைக்கவும் நீர்வளத்துறை தடை விதித்துள் ளது. மேலும், விடுமுறை நாட்களில் வெளியூரில் இருந்து பொதுமக்கள் வருவதைத் தடுக்க, பங்களாபுதூர் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர் குற்றம்: 73 பேர் கைது

கோவை, மார்ச் 31- கோவை மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடு பட்ட 73 பேரை காவல் துறை யினர் கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் குற்ற செயல்கள் நடைபெறு வதை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சனியன்று மாவட்டம் முழுவதும் தீவிர  சோதனைகள் நடத்தப்பட் டது. திருட்டு, வழிப்பறி மற் றும் வீடு புகுந்து திருட்டு ஆகிய வழக்குகளில் தொடர் புடைய நபர்களை கைது செய்ய 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்ப டையினர் அனைத்தும் உட் கோட்டங்களில் நடத்திய சோதனையில் பலர் கைது  செய்யப்பட்டனர். இதில், ஆதாயத்திற்காக நடை பெற்ற கொலை வழக்கில் தொடர்புடைய 3 நபர்கள், கூட்டுக் கொள்ளை வழக் கில் தொடர்புடைய 9 நபர் கள், வழிப்பறி வழக்கில் தொடர்புடைய 29 நபர்கள், இருசக்கர வாகன திருட்டு வழக்கில் தொடர்புடைய 21  நபர்கள், வீடு புகுந்து திரு டிய வழக்கில் தொடர்புடைய 11 நபர்கள் என மேற்படி குற்ற செயல்களில் ஈடுபட்ட  73 நபர்களை காவல் துறை யினர் கைது செய்தனர். இதில் கைது செய்யப் பட்ட நபர்கள் அனைவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட குற்ற  வழக்குகளில் தொடர்புடை யவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அதில் நீதிமன்ற ஜாமீ னில் தேடப்படும் குற்றவாளி கள் 3 நபர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி னர். 70 நபர்கள் மீது குற்றச் செயல்களை தடுக்கும் நோக் கில் ஒரு ஆண்டுக்கு நன்ன டத்தை ஜாமீன் பெற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இது போன்ற சோதனைகள் தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.