tamilnadu

மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை

மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு கணவன் தற்கொலை

சூலூர் அருகே பட்டணம்புதூரில் திங்க ளன்று காலை மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, கணவன் கேரளம் சென்று தற்கொலை செய்து கொண்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டணம்புதூரில் வசித்து வந்த கிருஷ்ண குமார் - சங்கீதா தம்பதியினருக்கு இடையே  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்தி ரமடைந்த கிருஷ்ணகுமார், தனது மனைவி  சங்கீதாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தனது  சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக் காட்டில் உள்ள வண்டாழி ஈரட்டுகுளம் என்ற  இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது  வீட்டின் முன்பாக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து  கொண்டுள்ளார். சங்கீதா தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரிய ராக பணியாற்றி வந்துள்ளார். இந்த தம்பதி யினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகள் கள் இருவரும் பள்ளிக்கு சென்ற பின்னர் இந்த  சம்பவம் நிகழ்ந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீ சார் சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக கோவை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள னர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு  பதிவு செய்து விசாரணையை முன்னெடுத் துள்ளனர். அதேபோல கேரளாவின் பாலக் காடு மாவட்ட போலீசாரும் கிருஷ்ணகுமா ரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மனைவி மீதான சந்தேகத்தில் இருவருக் கும் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்ட நிலை யில், ஆத்திரமடைந்து சங்கீதாவை துப்பாக்கி யால் சுட்டுக் கொன்றுவிட்டு கிருஷ்ணகுமார் தற்கொலை செய்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. எனினும் இருவரது உறவி னர்களிடமும் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சந்தேகம் காரணமாக மனைவியை துப் பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு கணவன், தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.