tamilnadu

img

அரசு ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்த கருத்தரங்கம்

அரசு ஊழியர் சங்கத்தின் வேலை நிறுத்த கருத்தரங்கம்

தருமபுரி, மே 18- அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில்,  அகில இந்திய வேலை நிறுத்த கருத் தரங்கம் சனியன்று நடைபெற்றது. ஜூலை 9 ஆம் தேதியன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடை பெறவுள்ளது. இதையெட்டி அரசு ஊழி யர் சங்கத்தின் சார்பில், வேலை நிறுத்த  ஆயத்த கருத்தரங்கம் தருமபுரி சிஐடியு  மாவட்டக்குழு அலுவலகத்தில் சனி யன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட் டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை  வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர்  மு.அன்பரசு, மாநில துணை பொதுச் செயலாளர் அண்ணா குபேரன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். இக்கூட்டத் தில், சத்துணவு, அங்கன்வாடி, ஆஷா  போன்ற ஊழியர்களை நிரந்தர ஊழிய ராக்க வேண்டும். அவர்களுக்கான பணிக்கொடை வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலாவதியான பணியிடங்களை புதுப்பிக்கப்பட வேண்டும். 8 மணி நேர வேலை உள்ளிட்ட போராடிப்பெற்ற உரிமைகள் பறிக்கப்படுவதை தடுத்து நிறுத்த, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9 அன்று நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை தருமபுரி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது, என முடிவு செய்யப்பட்டது. இந்த கருத்தரங்கில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.தெய்வானை, மாவட்டப் பொருளாளர் எம்.அன்பழகன், நிர்வாகிகள் பெ.மகேஸ்வரி, முருகன், குணசேகரன், கிருஷ்ணமூர்த்தி, தேவகி, ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.