tamilnadu

பாலியல் தொல்லையால் பட்டியலின சிறுமி தற்கொலை

பாலியல் தொல்லையால் பட்டியலின சிறுமி தற்கொலை

ஈரோடு, மே 2 – பெருந்துறை அருகே பாலியல் தொல்லை காரணமாக பட்டியலின சிறுமி தற்கொலை செய்து கொண்ட நிலையில், இவ்வழக்கை முறையாக பதிவு செய்யாமல் காவல்துறையினர் மெத்தனம் காட்டிய நிலையில் மார்க் சிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கத்தினர் நேரடி தலையீடு செய்தனர். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம் பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், இளைய மகள் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதி முடித்து விடுமு றையில் இருந்தார். அப்போது, பெருந் துறை பகுதியில் இயங்கி வரும் இன்ஃ ப்ராடெக்ஸ் என்ற நிறுவனத்தில் டெய்ல ரிங் உதவியாளராக தற்காலிகமாக வேலைக்குச் சேர்ந்துள்ளார். கடந்த மூன்று வாரங்களாக வேலை  செய்து வந்த நிலையில், அதே நிறுவ னத்தில் பணியாற்றிய ஆனந்த் என்ற  ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த நபர், இச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித் துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி, குழந்தைகள் உதவி மையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆனந் தின் அத்துமீறல் தொடர்ந்துள்ளது. இது குறித்து தனது தாயாரிடம் கூறியதை யடுத்து, வேலைக்குச் செல்ல வேண் டாம் என்று தாயார் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறுமி சமையலறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து  கொண்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாயார், அக்கம் பக் கத்தினர் உதவியுடன் சிறுமியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் சேர்த்தார். அங்கு பரி சோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே  அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து காவல் துறையி னருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், முறையாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. இதனையறிந்த, சிறுமியின் குடும்பத்தி னர் மற்றும் பல்வேறு அமைப்பினர் பிரேத பரிசோதனைக்கு மறுப்பு தெரி வித்தனர். இத்தகவலை அறிந்த உடனே மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, கொங்கு புலிகள், ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள், பகுஜன் சமாஜ், தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம் உள்ளிட்ட அமைப் புகளின் சம்பவ இடத்தில் குவிந்தனர். மேலும், காவல் துறையின் மெத்தனப் போக்கிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைய டுத்து, பட்டியல் சாதியினர் மீதான வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்ய உறுதியளிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ளப்பட் டது. ஆனால், காவல் துறையினர் அளித்த வாக்குறுதியின்படி நடக்க வில்லை என்று குற்றம் சாட்டப்படு கிறது. இந்நிலையில், வெள்ளியன்று, இறந்த சிறுமியின் பெற்றோர், உறவி னர்கள் மற்றும் அரசியல், சமூக அமைப் புகளின் பிரதிநிதிகள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். மாலை வரை  நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தையில், பட்டியலினத்தவர்கள் மீதான வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வது, குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலை வழங்குவது, ஒரு வருக்கு ஓய்வூதியம் வழங்குவது மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஒரு வீட்டு மனை வழங்குவது ஆகிய கோரிக் கைகள் எழுத்துப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, உடலை அவ ரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இதற்கிடையே, சிறுமியின் தற்கொலைக்கு காரணமான ஆனந்த் கைது செய்யப்பட்டு நீதிமன் றத்தில் நேர்நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக இறந்த பட்டியலின சிறுமியின் குடும்பத்திற்கு ஆதரவாக, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன், தாலுகா  செயலாளர் ஆர்.அர்சுணன், ததீஒமு மாவட்டத் தலை வர் பி.பி.பழனிசாமி, செயலாளர் எம். அண்ணாதுரை உள்ளிட்ட பலர் களத் தில் முன்னின்றனர்.