ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை குறி வைத்து மோசடி
கோவை, மே 5- ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் முதியோர்களின் சேமிப்பு தொகையை குறி வைத்து, பல கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் இயங்கி வரும் ஸ்ரீ நேசா என்ற நிறுவனம் ரூ.50 ஆயிரம் முதல் லட்சக்கணக் கில் பணம் முதலீடு செய்ததால், அந்த பணத்தை அந்நிறுவனத் தின் அறக்கட்டளையில் வரவு வைத்து, ஒவ்வொரு மாதமும் 24 சதவீத வட்டி தருவதாக கூறியுள்ளனர். குறிப்பாக ஓய்வு பெற்ற அரசு ஊழிர்களை கண்டறிந்து அவர்களை தெரித்தவர் கள் மூலமாக அணுகி, அந்நிறுவன பிரநிதிகள் பேசியுள்ள னர். அப்போது அரசு ஓய்வூதிய பணப்பலனை வங்கியி லேயே வைத்திருந்தால் எந்த பயனும் இல்லை. அதனை எங் கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 24 சதவீதம் வட்டி வழங்குவதாகவும், ஓராண்டு கழித்து முதலீடு செய்த பணத்தை பெற்றுக் கொண்டு மீண்டும் முதலீடு செய்யலாம். மேலும் முதலீடு செய்ய வரும் முதியோர்களி டம் முதலீடு செய்யும் போது முத்திரைதாளில் பதிவு செய்வ தால் அச்சப்படாமல் முதலீடு செய்யலாம் என கூறியுள்ள னர். மேலும் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.10 ஆயி ரம் வரை வட்டியாக பெறலாம் என கூறியுள்ளனர். இதை நம்பி ஓய்வு பெற்ற கூட்டுறவு சொசைட்டி ஊழியர்கள், பொதுப் பணி துறை உள்ளிட்ட பல்வேறு முன்னாள் அரசு ஊழியர் கள் மற்றும் முதியவர்கள் பல கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் கூறியது போல வட்டி யும் கொடுக்காமல், முதலீடு செய்த பணத்தையும் ஏமாற்றி யுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரை விசாரித்த போலீசார் கோவை மாவட்ட பொருளா தார குற்றப்பிரிவுக்கு புகாரை மாற்றி, பாதிக்கப்பட்டவர் களை விசாரிக்க அழைத்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப் பட்ட 10க்கும் மேற்பட்ட முன்னாள் அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத் தில் உள்ள பெருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தனர். இது குறித்து பேசிய ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க ஊழியர், கடந்த 2023 இல் தனக்கு பழக்கமான நபர் மூலம் ஸ்ரீ நேஷா நிறு வனத்தினர் அறிமுகமாகினர். அவர்கள் மதுரைக்கு வர வழைத்து என்னிடம் பேசினர். அப்போது தங்களது நிறுவ னத்தின் பெயரில் உள்ள அறக்கட்டளையில் தான் பணம் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தனர். மேலும் அறக் கட்டளை என்றால் ஜி.எஸ்.டி போன்ற வரிகள் இருக்காது. இத னால் அறக்கட்டளை சார்பில் வாங்கப்படும் பொருட்கள் வரி சலுகையுடன் கிடைக்கும் அதனை கொண்டு தான் லாபம் ஈட்டி கொடுப்பதாக தெரிவித்தனர். இதை நம்பி முதலில் ரூ.5 லட்சம் முதலீடு செய்தேன். அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் வட்டி வங்கி கணக்கில் வரவு வைத்தனர். அதன் பின்னரே மனைவி, மகன் பெயர்களில் என பல தவணைகளில் ரூ.65 லட் சம் வரை முதலீடு செய்தேன். தற்போது அவர்களது செல் போன் எண்கள் சுவிட் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தெரி வித்தார். உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதேபோல முன்னாள் அரசு ஊழியர்களையும், முதியவர் களை குறி வைத்து சேமிப்புகளை எங்கள் அறக்கட்டளை யில் முதலீடு செய்தால், கூடுதல் வருவாய் ஈட்டலாம் எனக் கூறி தமிழ்நாடு முழுவதும் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்து நிறுத்தம் கேட்டு மனு
தருமபுரி, மே. 5 – தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட, காராஜ்நகரில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த அம்மனுவில் கூறியிருப்ப தாவது, தருமபுரி ஒன்றியத்திற்குபட்டது காமராஜ்நகர், அண் ணாநகர் இந்த கிராமம் தருமபுரியில் இருந்து அரூர் செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள கிராம மக்கள் தருமபுரி மற்றும் அரூர் செல்ல இந்த கிராமத் தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இராஜ பேட்டை அல்லது 2 கிலோமீட்டர் தொலைவில் டீக்கடை பேருந்து நிறுத்தத்திற்கு செல்லவேண்டும். இந்த கிராமத் தில் உள்ள மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் தினமும் கல்லூரி பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் நடந்து 2 கிலோ மீட்டர் நடந்து சென்று அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்கு செல்லவேண்டும். இதனால் மாணவர்க ளுக்கு காலதாமதம் ஏற்படுகிறது பொதுமக்களுக்கு நேர விரையம் ஏற்படுகிறது. மேலும் மழை காலம் மற்றும் இரவு நேரங்களில் மிகுந்த சிரத்திற்குள்ளாகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி காமராஜர் நகரில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தி அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை வேண்டும் என அதில் குறிப் பிட்டுள்ளனர்.
அணைகள் நிலவரம்
சோலையார் அணை நீர்மட்டம்:1.98/160 அடி நீர்வரத்து:9.96கனஅடி நீர்திறப்பு:9.96கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:37.30/72 அடி நீர்வரத்து:83கனஅடி நீர்திறப்பு:1010கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:70.65/120அடி நீர்வரத்து:243கனஅடி நீர்திறப்பு:41கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:34.83/60அடி நீர்வரத்து:842கனஅடி நீர்திறப்பு:1038கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்: 47.80/90அடி நீர்வரத்து:14கனஅடி நீர்திறப்பு:68கனஅடி
புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது
கோவை, மே 5- தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீ சார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே பூசாரி பாளையம் பகுதியில் திங்களன்று செல்வபுரம் காவல் நிலைய போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை யின் போது, அப்பகுதியில் தடை செய்யப்பட்ட புகையி லைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த ராஜேந் திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். ராஜேந்திரனி டம் இருந்து கூல் லிப், கணேஷ், வி-1 புகையிலை, விமல் பான் மசாலா, டைரக்டர் பான் மசாலா ஆகிய தடை செய் யப்பட்ட புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருட் களின் மொத்த எடை 1.6 கிலோ ஆகும். கைது செய்யய் பட்ட ராஜேந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.