அரசுப்பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
நாமக்கல், ஜூன் 18- குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு, புத்தகங்கள் மற்றும் 12 மின்விசிறிகளை முன் னாள் மாணவர்கள் வழங்கினர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூலகத்திற்கு ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் 12 மின்விசிறிகளை பள்ளியின் முன்னாள் மாணவர்களான ஜீவானந்தம், தனபால் ஆகியோர் புதனன்று வழங்கினர். இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் இருந்து விடுபட்டு அறிவுத் திறனை வளர்ப்பதற்காகவும், கல்லூரி நுழைவுத்தேர்வுக ளில் வெற்றி பெறவும் புத்தகங்களை தொடர்ந்து வழங்க இருப்பதாகவும் கூறினர். இவற்றை ஆசிரியர்கள் சிவகுமார், கவிராஜ், என்சிசி அலுவலர் அந்தோணிசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.