சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
கோபி, ஏப்.18– கோபி அருகே உள்ள சஞ்சீவிராயன்குளம் பகுதியில் கடந்த ஒருமாதமாக கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பெருமுகை ஊராட்சிக்குட்பட்ட கொளத்துக்காடு, சின்னகொளத்துக் காடு, அண்ணாநகர், சைபன்புதூர், சஞ்சீவிராயன்குளம் உள் ளிட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இதில் விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, உள் ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் சின்னகொளத்துக்காடு பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கோபால் என்பவரின் விவசாய தோட்டத்தில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத விலங்கு புகுந்து ஆட்டை கடித்து சென்றது இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்த னர். தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து அடையாளம் தெரியாத அந்த விலங்கின் கால் தடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆட்டை கடித்து இழுத்து சென்றது சிறுத்தை தான் என உறுதிபடுத்தினர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் இரவில் செந்தில்குமார் எனபவரின் விவசாய தோட் டத்தில் புகுந்த சிறுத்தை 10க்கும் மேற்பட்ட கோழிகளை கடித்து குதறி விட்டு நாயை கடித்து இழுத்து சென்றது. வனத் துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்கா ணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சின்னகொளத்துக்காடு பகுதியில் கந்தசாமி என்பவ ரின் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை காவலுக்கு கட்டி வைக்கப் பட்டிருந்த நாயை கடித்து குதறியது. இதனை நேரில் பார்த்த அவரது மகன் பிரபு உடனே அக்கம் பக்கத்தில் இருப்பவர்க ளுக்கு தகவல் அளித்து அனைவரும் ஒன்று திரண்டு சிறுத் தையை விரட்டினர். இதனைதொடர்ந்து மாவட்ட வனத்துறை அலுவலர் அப் போல்லோநாயுடு வனசரகர் முருகேசன் தலைமையிலான குழு சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர்.