tamilnadu

img

ஈரோடு, நாமக்கல் ஆட்சியர்கள் பொறுப்பேற்பு

ஈரோடு, நாமக்கல் ஆட்சியர்கள் பொறுப்பேற்பு

ஈரோடு, ஜுன் 27- ஈரோடு மாவட்ட ஆட்சியராக ச.கந்த சாமி வெள்ளியன்று பொறுப்பேற்றுக் கொண் டார். விவசாயத்தை பெருக்குவதும், பள்ளி  கல்வியில் கவனம் செலுத்துவதும் எனது  முக்கிய பணியாக இருக்கும் என செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஈரோடு  என்ற பாராம்பரியமிக்க மாவட்டத்தில், ஆட்சி யராக பணியாற்றிட வாய்ப்பளித்தமைக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய தினம் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் மூலமாக எனது பணியினை தொடங்க உள்ளேன். சிப்காட்டில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சனை அதற்கான தீர்வு காணும் வகையிலும், விவசாயத்தை பெருக் குவதும், பள்ளி கல்வியில் கவனம் செலுத்து வதும் எனது முக்கியப்பணி, என்றார்.  நாமக்கல் ஆட்சியராக துர்காமூர்த்தி நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணி யாற்றி வந்த ச.உமா பணியிட மாற்றம் செய் யப்பட்டதை அடுத்து, புதிய ஆட்சியராக துர்காமூர்த்தி நியமிக்கப்பட்டார். இதைய டுத்து அவர் வெள்ளியன்று ஆட்சியர் அலுவ லகத்தில், மாவட்டத்தின் 17 ஆவது ஆட்சிய ராக பொறுப்பேற்றுக் கொண்டார். அரசு கோப்புகளில் கையெழுத்திட்ட அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், அனைத்து திட் டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன். நாமக்கல் மாவட்ட  மக்கள் கடின உழைப்பாளிகள், உழைப்பால் உயர்ந்தவர்கள். இந்த மாவட்டத்தில், ஏற்க னவே மாவட்ட வருவாய் அலுவலராக இருந் ததால், மாவட்ட நிலவரம் குறித்து நன்கு அறிந்துள்ளேன். தற்போது ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளதால், மாவட்ட மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்ற முடியும். குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன், என்றார். இதனிடையே, மாநில ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங் களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.