tamilnadu

திருப்பூரில் பெருகும் போதைப் பொருள் விற்பனை! சமூக விரோத செயல்களை தடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூரில் பெருகும் போதைப் பொருள் விற்பனை! சமூக விரோத செயல்களை தடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலும் கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் போன்ற போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இதன்  விளைவாக திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களும் பெருகி வரு கின்றன. எனவே மாவட்ட நிர்வா கம், காவல் துறை போதைப் புழக் கத்தை தடுத்து நிறுத்த சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் எஸ். பவித்ராதேவி தலை மையில் வியாழனன்று நடைபெற் றது. இக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட் டச் செயலாளர் சி.மூர்த்தி உள்பட மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். இக்கூட் டத்தில், பள்ளி, கல்லூரி போன்ற  கல்வி நிலையங்கள் அருகிலும், பொதுமக்கள் கூடும் இடங்களிலும் சமூக விரோதிகள் சட்டவிரோத மாக போதைப் பொருள் விற்பனை யில் ஈடுபட்டு வருகின்றனர். இத னால் இளைஞர்கள் பலர் போதைப்  பழக்கத்திற்கு ஆளாகி, குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். போதைப் பொருள் விற்ப னையை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையின் ஒரு பகுதியி னர், இந்த சமூக விரோத கும்பலுக்கு மறைமுக ஆதரவாக செயல்படு கின்றனர். போதை கும்பல் பற்றி  காவல் துறைக்கு தகவல் தெரிவித் தாலோ, குற்றச் சம்பவங்களில் ஈடு படும் போதை பேர்வழிகளை காவல் துறையினரிடம் பிடித்துக் கொடுத் தாலோ காவல்துறையினர் சட்டப் படி வழக்கு பதிவு செய்து நடவ டிக்கை எடுப்பதில்லை. இதனால்  பொதுமக்களும், சமூக நலனில் அக்கறையோடு செயல்படுபவர் களும் அச்சமடைந்துள்ளனர். சமீ பத்தில் திருப்பூர் மாநகரம் முரு கம்பாளையத்தில் போதை கும்பல் ஒன்று, இளைஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்க ளிடையே பெரும் அச்சத்தை ஏற்ப டுத்தியுள்ளது. எனவே, போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தவும், போதைப் பொருட்கள் சட்டவிரோத விற்ப னையை முழுமையாக கண்டறிந்து தடை செய்யவும், தடுத்து நிறுத்த வும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இளைய தலை முறையினரின் வாழ்க்கையை பாது காக்கவும், சட்டவிரோத சமூக  விரோத சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்கள் அச்சத்தை போக்க வும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.