tamilnadu

img

மருத்துவர்கள் போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் ஆதரவு

மருத்துவர்கள் போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் ஆதரவு

சேலம், ஜூன் 18- வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட் டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப் பிற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆதரவு தெரி வித்துள்ளனர். 2009 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354யை, மறுசீராய்வு செய்து ஊதிய பட்டை 4ஐ, 13 ஆவது  ஆண்டில் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார மருத்துவ நிலைய மருத்துவர்களுக்கு படித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங் கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பின் மண்டல ஒருங் கிணைப்பாளர் சுந்தரேசன் தலைமை வகித்தார். மாநிலச் செய லாளர் செந்தில்குமார், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர், நேரில் சென்று போராட்டத்தை வாழ்த்தி பேசினார். மேலும் மருத்து வர்கள் கோரிக்கைகள் வெற்றி பெறும் வரை மருத்து வர்கள் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆத ரவு தெரிவிப்பதாக, தெரிவித்தார்.

மா விவசாயிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும், என வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அண்ணா சிலை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத் தின் மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், துணைத்தலை வர்கள் கே.பூபதி, ஆர்.வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண் டனர்.