விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி அவிநாசியில் ஆர்ப்பாட்டம்
விசைத்தறித் தொழிலா ளர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி அவிநாசியில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் செவ்வாயன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்க ளுக்கு விலைவாசி உயர்வுக்கேற்ற கூலி உயர்வு வழங்கவும், கூலிக்கு நெசவு செய் யும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கையை காலம் தாழ்த்தாமல் தீர்க்கவும், ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி உரிமையாளர்கள் தொழிற் சங்கங்களை கொண்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தவும், தொழிற்சங்கங் கள் கூலி உயர்வு கேட்டு கடிதம் கொடுத் தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத் தின் மாவட்டத் தலைவர் கே.வேலுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. முத்துசாமி, மாவட்டப் பொருளாளர் கே. முருகன் மாவட்ட துணைத் தலைவர் பி. சாமியப்பன், மாவட்ட துணைச் செயலா ளர் ஆர்.பழனிச்சாமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே.மாறன், ராயன், வடிவேல் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.