tamilnadu

img

வாலிபர் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி

வாலிபர் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி

நாமக்கல், மே 19- வாலிபர் சங்கத்தின் சார் பில் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம்,  பள்ளிபாளையத்தில், இந் திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார் பில் முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி  சனியன்று இரவு தொடங்கி ஞாயிறன்று இரவு  வரை நடைபெற்றது. பல்வேறு பகுதியி லிருந்து வந்திருந்த விளையாட்டு வீரர் கள் போட்டியில் பங்கேற்றனர். போட்டியினை வாலிபர் சங்க முன்னாள்  மாவட்டத் தலைவர்கள் எம்.அசோகன், எஸ். சுரேஷ், கே.மோகன் எம்.லட்சுமணன், மாவட் டச் செயலாளர் எம்.மணிகண்டன் ஆகி யோர் துவக்கி வைத்தனர். ஒன்றியச் செயலா ளர் நவீன் முன்னிலை வகித்தார். இதில், வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரி சாக ரூ.10001, 2 ஆவது பரிசாக ரூ.8001, 3  ஆவது பரிசாக ரூ.6001, 4 ஆவது பரிசாக  ரூ.4001, 5 ஆவது பரிசாக ரூ.2001 மற்றும் சுழற் கோப்பை ஆகியவை வழங்கப்பட்டது.