tamilnadu

img

மணலி விரைவுச் சாலையில் இடைவெளியின்றி மையத்தடுப்பு சிபிஎம் போராட்டம்

மணலி விரைவுச் சாலையில் இடைவெளியின்றி மையத்தடுப்பு  சிபிஎம் போராட்டம் 

சென்னை, ஜூன் 10-- துறைமுகம் முதல் பஞ்செட்டி வரை 4 வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் மணலி விரைவுச்சாலையில் எர்ணா வூர் மேம்பாலம் முதல் சத்தியமூர்த்தி நகர் வரை சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு இடைவெளியின்றி மையத் தடுப்பு அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்கிடையில் உள்ள முருகப்பா நகர், ஜோதி நகர், டி.கே.எஸ். நகர் ஆகிய 3 பேருந்து  நிறுத்தங்க ளில் இறங்கும் மக்கள் சாலையை கடக்க இடை வெளி விடாமல் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்றது. இந்நிலையில் இடை வெளி விடாமல் தடுப்பு சுவர் கட்ட கூடாது என சிபிஎம் கவுன்சிலர் ஆர்.ஜெயராமன் தலைமையில் பகுதிவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தாங்காடு காவல் ஆய்வாளர் ராஜீவ், போக்கு வரத்து காவல் உதவி ஆய்வாளர் பேபி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். அப்போது மக்கள் சாலையை கடக்க மையத்    தடுப்பில் இடைவெளி விட்டு கட்ட வேண்டும் என ஜெயராமன் வலியுறுத்தி னார். பின்னர் இடைவெளி விட்டு கட்டப்படும் என்று உறுதி அளித்தனர். இதை யடுத்து தற்காலிக மாக போராட்டம் கைவிடப் படுவதாக தெரிவித்தனர். இதில் வடக்கு செய லாளர் எஸ்.கதிர்வேல், தெற்கு பகுதி செயலாளர் ஆர்.கருணாநிதி, பகுதிக் குழு உறுப்பினர்கள் புஷ்பா, கே.வெங்கட்டையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.