tamilnadu

img

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக சிபிஎம் ஆவேசம்

சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக சிபிஎம் ஆவேசம்

சமையல் எரிவாயு விலை உயர் வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ஒன்றிய மோடி அரசின் மக்கள்  விரோதப் போக்கை கண்டித்து,  குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண் டர் விலை உயர்வை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் கோவை மாவட்டத்தில் பத்துக் கும் மேற்பட்ட மையங்களில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி புரம் திருவள்ளுவர் பேருந்து நிலை யம் அருகே கிழக்கு நகர குழு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கிருஷ்ணமூர்த்தி உரையாற் றினார். நகரச் செயலாளர் கே. சுபாஷ், மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஆர்.மகேஸ்வரன், டி.சுதா, என்.ஜாகிர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெரிய நாயக்கன்பாளையத் தில் வீரபாண்டி பிரிவில் ஒன்றிய குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந் தது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.அஜய்குமார், ஒன்றிய செய லாளர் மோகன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ந. ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். எஸ்.எஸ்.குளம் மேற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் சண்முகசுந்த ரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். கோபால், வி.இராமமூர்த்தி எம்சி., உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். பீளமேடு நகரக்குழுவின் ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப் பினர் கே.பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அஜய்குமார், நகர செயலாளர் ஏ.மேகநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் தி.மணி ஆகி யோர் உரையாற்றினர். மாநக ராட்சி உறுப்பினர்கள் ஆர்.பூபதி, கண்ணகி ஜோதிபாசு உட்பட பலர் பங்கேற்றனர். பொள்ளாச்சியில் தாலுகா உறுப்பினர் கே.மகாலிங் கம் தலைமையில் நடந்த ஆர்ப் பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழனிச்சாமி, தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஸ்டாலின் பழனிசாமி, மாதேஸ் வரன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். சிங்காநல்லூர், வரதராஜபுரத் தில் என்.பரமசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  தெய்வேந்திரன், நகரச் செயலாளர் ஆர்.மூர்த்தி, நகரக்குழு உறுப்பினர் கள் கே. ரத்தினகுமார், ப.கிருஷ்ண குமார் ஆகியோர் உரையாற்றினர். சீனிவாசன் நன்றி கூறினார். கோவை வடக்கு நகரக்குழு சார் பில் காமராஜபுரத்தில் பி.பழனிச் சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப் பினர் என்.ஆர். முருகேசன், நகர செயலாளர் எஸ்.நாராயணசாமி, மாவட்ட குழு உறுப்பினர் கே.தங்க மணி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். கிளைச் செயலாளர் சௌந் தரராஜன் நன்றி கூறினார். கோவை தெற்கு நகர குழு வினர் சுந்தராபுரம் சங்கம் வீதியில் நகர செயலாளர் நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பி னர் எஸ்.கருப்பையா, மதுக்கரை சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். பஞ்சலிங்கம் ஆகியோர் உரையாற் றினர். கே.ஆர்.ரவி நன்றி கூறி னார். எஸ்.எஸ்.குளம் கிழக்கு  இடைக்குழு சார்பில் விளாங்குறிச் சியில் இடைக்குழு செயலாளர் எஸ்.வெள்ளியங்கிரி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.பாரதி, இடைக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஈஸ்வ ரன், சந்திரசேகர், கிருஷ்ணசாமி, ராபர்ட் மணி, கல்யாணி உள்ளிட் டோர் பங்கேற்றனர். சேலம் இதேபோன்று, சேலம் மாவட் டம், மேட்டூர் அணை ஸ்டேட் பேங்க்  முன்பு புதனன்று நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா ளர் எஸ்.வசந்தி தலைமை வகித் தார். இதில், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பி.தங்க வேலு உட்பட பலர் கலந்து கொண் டனர்.  எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, கட்சியின் தாலுகாச் செய லாளர் கே.நடராஜன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட அமைப் புக்குழு உறுப்பினர் எஸ்.பவித்ரன், விவசாயத் தொழிலாளர் சங்க  மாவட்டத் தலைவர் ஜி.கணபதி உட் பட பலர் கலந்து கொண்டனர்.