tamilnadu

சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்

திருப்பூர், ஜூன் 18- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் மார்சிஸ்ட் கட்சியினர் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகா, மூலனூரில் சந்தைக்கடை, கடை வீதி, டெம்போ ஸ்டேண்ட், வெள்ளகோவில் பிரிவு ஆகிய நான்கு இடங்களில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. கிளைச் செயலாளர் மாணிக் கம் தலைமை வகித்தார். இதில் மாவட் டக்குழு உறுப்பினர் என்.கனகராஜ் உட் பட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று பல்லடம் ஒன்றியக்குழு சார் பில், பச்சாபாளையம், ராம்ராஜ் நகர்,  பட்டேல் வீதி, மங்கலம் சாலை, அமரர்  ஜெயபிரகாஷ் வீதி உள்ளிட்ட இடங்க ளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் வை.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.பரம சிவம் ஆகியோர் பங்கேற்றனர். உடுமலை சிபிஎம் உடுமலை நகரக்குழு சார் பில், நடைபயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது. நகரச் செயலாளர் தண் டபாணி தலைமை வகித்தார். பி.வி.கோவில் வீதி பகுதியில் துவங்கிய பிரச் சாரம், தளி சாலை, காந்திசவுக், நக ராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலு வலகம், ஒன்றிய அலுவலகம், கொல் லம்பட்டரை, தங்கமாள் ஓடை வழி யாக சென்று உழவர் சந்தையில் நிறைவு  பெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதணன், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங் கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தருமபுரி தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற  பிரச்சார இயக்கத்தில், நல்லம்பள்ளி வட்டத்தில் தரிசு நிலம், கல்லாங்குத்து, பாறை, காடு, கிராம நத்தம், அரசு புறம்போக்கு உள்ளிட்ட நிலங் களில் வீடு கட்டி குடியிருந்து வருப வர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக் கத்தில் ஈடுபட்டனர். தடங்கம் கிரா மத்தில் தொடங்கிய பிரச்சாரத்திற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.சின் னராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மூத்த  தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சோ.அருச் சுனன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.கிரைஸாமேரி, கே.என்.மல்லை யன், கே.எல்லப்பன் உட்பட பலர்  கலந்து கொண்டனர். ஏலகரியான் கொட்டாய், அதியமான் கோட்டை, ஒட் டப்பட்டி, பழைய கோட்ரஸ், தேங்கா மரத்துப்பட்டி, எர்ரப்பட்டி, மிட்டா ரெட்டி அள்ளி, இலளிகம் உள்ளிட்ட கிரா மங்களில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. சேலம் சேலம் மாவட்டம், அய்யம்பாளை யம் கிளை சார்பில் மக்கள் சந்திப்பு பிரச் சார இயக்கம் நடைபெற்றது. அன்ன பூர்ணா மருத்துவக்கல்லூரியில் துவங்கி பிரச்சார இயக்கம் சீரகாபாடி,  அரியானூர், வீரபாண்டி, பாலம் பட்டி,  பைரோஜி, எஸ் பாலம், ஆட்டையாம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற் றது. ஈரோடு ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட் டம், க.மேட்டூர், பாறையூர், வையங் கோட்டை, கூலி வலசு, பொய்யேரிக் கரை மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும். மயான உரிமையை உறுதிப் படுத்த வேண்டும். க.மேட்டூர் பகு தியை உள்ளடக்கிய ஏழு கிராம மக்க ளுக்கு சுடுகாட்டு இடம் வழங்க வேண் டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சார  இயக்கம் நடைபெற்றது. தவிட்டுப் பாளையம் மார்க்கெட் பகுதியில் துவங் கிய இயக்கத்திற்கு, தாலுகாக்குழு உறுப்பினர் கே.ஏ.குருசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.ஆர்.விஜயராகவன் தொடங்கி வைத்தார். பேருந்து நிலை யம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக  நடைபெற்ற இயக்கம், அரசு மருத்துவ மனை பகுதியில் நிறைவடைந்தது. வட் டச் செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.மாரி முத்து உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதேபோன்று பவானிசாகர் ஒன் றியத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு  பிரச்சார இயக்கத்திற்கு, வட்டாரக் குழு உறுப்பினர் ஆர்.ரமேஷ் தலைமை  வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.துரைசாமி, வட்டாரச் செயலா ளர் டி.சுப்பிரமணி உட்பட பலர் கலந்து  கொண்டனர். 20 கிராமங்களில் பிரச்சார  இயக்கம் நடைபெற்றது. புளியம்பட்டி பகுதியில் 13 மையங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. வட்டாரக்குழு உறுப்பி னர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி. பழனிசாமி கலந்து கொண்டார்.  ஈரோடு வட்டம், விருமாண்டம் பாளையம், மேட்டுநாசுவம்பாளையம் பகுதிகளில் கிளைச் செயலாளர் கே. முருகன் தலைமையில் பிரச்சாரம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப் பினர் பா.லலிதா ஆகியோர் பங்கேற்ற னர். கவுந்தப்பாடி ஊராட்சி மற்றும்  சலங்கபாளையம் பேரூராட்சி பகுதி யில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு தாலுகாக்குழு உறுப்பினர் கே.ஆர்.சண்முகம் தலைமை வகித்தார். மாவட் டக்குழு உறுப்பினர் எஸ்.மாணிக்கம் சிறப்புரையாற்றினார். பவானி நகரில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு தாலுகாச் செயலாளர் ஆர்.பிரகாஷ் தலைமை வகித்தார். பழைய மற்றும்  புதிய பேருந்து நிலையம், கீரைக்கார  தெரு, அந்தியூர் முக்கு உள்ளிட்ட  பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற் றது. மாநிலக்குழு உறுப்பினர் வீ.அமிர் தலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.பி.பழனிசாமி ஆகியோர் சிறப் புரையாற்றினர். கோவை  கோவை மாவட்டம், பெரிய நாயக் கன்பாளையம் ஒன்றியக்குழு சார்பில்  வாகன பிரச்சார இயக்கம், இடையர் பாளையத்தில் துவங்கி டிவிஎஸ் நகர்,  சோமையம்பாளையம், கணுவாய்,  தடாகம் ஆகிய பகுதிகளில் நடைபெற் றது. ஒன்றியச் செயலாளர் எம்.மோகன் ராஜ் தலைமை வகித்தார். இதில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்  கே.அஜய்குமார், மாவட்டக்குழு உறுப் பினர் என்.ராஜா ஆகியோர் பங்கேற்ற னர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், தொட்டிபட்டி ஊராட்சியில் வசித்து வரும் மக்க ளுக்கு மயான வசதி செய்து தர வேண் டும். வீட்டுமனை இல்லாத ஏழை குடும் பங்களுக்கு பட்டா வழங்கி, வீடு கட் டித்தர வேண்டும், உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து சிபிஎம் பிரச் சார இயக்கம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் ஆர்.நடேசன் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலா ளர் எஸ்.கந்தசாமி உட்பட பலர் கலந்து  கொண்டனர்.