tamilnadu

img

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புடைய  பஞ்சு மற்றும் இயந்திரங்கள் தீக்கிரை

கோவை, ஏப்.10– சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கழிவுப் பஞ்சு குடோனில் வியாழனன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.1 கோடி மதிப்புடைய பஞ்சு மற்றும் இயந்திரங்கள் தீக்கிரையானது.  கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் சாலையில் விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான குடோன் உள்ளது. இதில் சுமார் 75 டன் கழிவுப் பஞ்சு சேமித்து வைக்கப்பட்டி ருந்தது. பஞ்சுகளைப் பயன்படுத்தி மெத்தை மற்றும் தலை யணை உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டு நாட் களுக்கு முன்பு இக் குடோனில் சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டு, அது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் வியாழ னன்று அதிகாலை 3 மணியளவில் மீண்டும் தீப்பற்றியது. பர பரப்பான காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவி, முழு குடோ னையும் குறுகிய நேரத்தில் தீக்கிரையாக்கியது. தீ விபத்தில், ஒரு கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள பஞ்சு, 20 லட் சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு பிரிப்பு இயந்திரங்கள் மற்றும் குடோன் கட்டடம் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்துள்ளன. ஆரம்பகட்ட மதிப்பீட்டின்படி, மொத்த சேதம் ரூ.70 லட்சத் தைக் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. தீயைக் கண்டதும் ஊழி யர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கட்டுப்படுத்த முயன்றாலும், தீயின் வேகம் காரணமாக முயற்சிகள் வீணானது. தகவல றிந்து, சூலூர், கருமத்தம்பட்டி, பீளமேடு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சம்பவத்துக்கு முன்னர் ஏற்பட்டிருந்த தீ விபத்து தொடர்பாக காப்பீடு நிறுவனத்தினர் வரவிருக்கையில், மீண் டும் ஏற்பட்ட இந்த விபத்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள தாக அப்பகுதியினர் தெரிவித்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாயை வேட்டையாடிச் சென்ற சிறுத்தை

உதகை, ஏப்.10– உதகை பகுதியில் குடியிருப்புகளில் புகுந்த சிறுத்தை ஒன்று, வீட்டு படிக்கட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாயை  வேட்டையாடி சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதன் சுற்றுவட்டா ரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தைகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது. வனப்பகுதியைத் தாண்டி குடி யிருப்புகளில் உலவும் இச்சிறுத்தைகள், வீட்டில் வளர்க்கப் படும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டை யாடும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப டுத்தி வருகின்றன. அண்மையில், , உதகை அருகே உள்ள தலையாட்டுமந்து பகுதியில், ஒரு வீட்டின் படிக்கட்டில் தூங்கிக் கொண்டிருந்த நாயை, வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை ஒன்றும் பதுங்கிப் பார்வையிட்டு, பின்னர் மெது வாக நெருங்கி, அதன் கழுத்தைப் பிடித்து தூக்கிச் சென் றது. இந்த காட்சிகள் வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்ட சிசி டிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இக்காட்சிகள் தற் போது இணையத்தில் பரவி வருகிறது. “வனத்துறையினர் சம் பவம் நடந்த இடத்தில் உடனடியாக கண்காணிப்பு நடவ டிக்கைகள் மேற்கொண்டு, சிறுத்தை நடமாட்டத்தைக் கட்டுப் படுத்த வேண்டும்” என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.  இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்சாரம் பாய்ந்து 3 பேர் பலி: ஒருவர் கைது

மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்த வழக்கில், தோட்டத்து உரிமையாளரை காவல் துறையினர் புதனன்று கைது செய்த னர். நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள ஆண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளஞ்சியம் (50) என்பவர், தனது பேரன்  சுஜித் (5), பேத்தி ஐவிழி (4) ஆகியோரு டன் விவசாயத் தோட்டத்துக்கு திங்களன்று சென்றுள்ளார். அப்போது இவர்களது தோட் டத்தை ஒட்டி, பக்கத்துத் தோட்டத்தில் அமைக் கப்பட்டிருந்த கம்பிவேலியில் கைவைத்த போது மின்சாரம் பாய்ந்து மூன்று பேரும் உயிரிழந்தனர். அருகிலிருந்த மின் கம்பத்தில்  இருந்து மின் வயர் அறுந்து கம்பிவேலியில் விழுந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து  மோகனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த னர். இந்நிலையில், மின்கசிவு ஏற்படும் வகை யில் கம்பிவேலி அமைத்த பக்கத்து தோட்ட உரிமையாளர் சுப்பிரமணியனையும் (55), மின் ஊழியரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் உற வினர்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாயன்று மறியலில் ஈடுபட்ட னர். இதையடுத்து மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன், சமாதானப் படுத்தி மறியலை கைவிட செய்தார். இந்நி லையில், உயிரிழப்பை ஏற்படுத்தும் வகை யில் அலட்சியமாகவும், பாதுகாப்பற்ற முறை யிலும் வேலி அமைத்ததாக மோகனூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியனை புதனன்று கைது செய்த னர்.

தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்

று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென தீப் பிடித்து எரிந்ததால் பர பரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் முனியப்பன் கோவில் அருகே வேல்முரு கன் என்பவர் வியாழனன்று இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப் போது வாகனத்தில் திடீரென தீப்பிடித்து புகை வந்ததை  கண்ட வேல்முருகன் உடனே வாகனத்தை சாலையோரம் நிறுத்தினார். தொடர்ந்து, தக தகவென தீப்பிடித்து எரிந்த இரு சக்கர வாகனம் சற்று நேரத்தில் எழும்புக்கூடாக மாறியது. இதுகுறித்து தகவ லறிந்து வந்த தீயணைப்புத்  துறையினர் தீயை அணைத் தனர்.