tamilnadu

img

கோவில்பட்டி நீதிமன்றத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு... 

தூத்துக்குடி 
தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நகரான கோவில்பட்டி விருதுநகர் மாவட்ட எல்லைக்கு அருகில் உள்ளது. இங்கு கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் கோவில்பட்டி நீதிமன்றத்தில் 5 ஊழியர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதன்மூலம் அந்நகரின் மொத்த பாதிப்பு 420 ஆக உயர்ந்துள்ளது. 
தீப்பெட்டி மற்றும் பட்டாசு, நூற்பாலைகள் போன்றவற்றின் மூலம் கோவில்பட்டியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று (ஞாயிறு) கோவில்பட்டி நகருக்கு அருகே ஒரு தனியார் ஆலையில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

;