மூடு விழாவை நோக்கி நகரும் கூட்டுறவு சர்க்கரை ஆலை
உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
தருமபுரி, மே 9- சிறந்த சர்க்கரை ஆலை என சான்றிதழ் பெற்ற, தருமபுரி கூட்டு றவு சர்க்கரை ஆலை தற்போது மூடு விழாவை நோக்கி தள்ளப் பட்டுள்ள நிலையில், உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோட்டில் மாவட்ட கூட்டுறவு சர்க் கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையானது ஒரு பருவத் தில் 4 லட்சம் மெட்ரிக் டன் கரும்பை அரவை செய்து, சிறந்த சர்க்கரை ஆலை என சான்றிதழ் பெற்றுள் ளது. ஆனால், தற்போது நிர்வாக சீர்கேட்டால் படிப்படியாக தேய்ந்து, நலிவடைந்து மூடு விழாவை நோக்கி சென்று கொண்டிருக்கி றது. நடப்பு பருவத்தில் கரும்பு அரவை துவக்கிய வேகத்திலேயே 15 நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. இயந்திரம் கேளாறு என காரணம் கூறப்பட்டது. இந்நிலையில் வெள் ளியன்று மாநில சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ரா. ராஜேந்திரன் ஆலையில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் விவ சாயிகள், தொழிலாளர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினர். அப்போது கரும்பு விவசாயி கள் பேசுகையில், தாங்கள் விளை வித்த கரும்புகளை திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளோம். இதனால் ஒரு டன் கரும்புக்கு 1000 ரூபாய் நஷ்டம் ஏற் பட்டதுடன், கரும்புக்கான பணம் முறையாக கிடைக்கவில்லை. மேலும், தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவ தில்லை. போதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. தற்காலிக தொழிலாளர்கள் சிலரையும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சிலரை யும் வைத்து கொண்டு ஆலையை சரியாக நடத்தாததால் சர்க்கரை ஆலை மூடும் தருவாயில் உள்ளது. இதனால் இந்த ஆலையை நம்பி யுள்ள ஆயிரக்கணக்கான கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள், லாரி தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள னர். மேலும், ஒரு பக்கம் வெட்டுக் கூலி, லாரி வாடகை, மறுபக்கம் கடும் வறட்சியால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தூள் செட்டி ஏரி, என்னேகொல்புதூர் நீர் பாசன திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி, 4 ஆண்டுகளாகியும் இன் னும் நிறைவேற்றவில்லை. இப்பி ரச்சனைகள் குறித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்ற னர். இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரன், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சர்க்கரை ஆலைகளி லும் வெட்டுக் கூலி, லாரி வாடகை, பிரச்சனைகள் உள்ளது. இதுகு றித்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார், என்றார். இந்நிகழ்வில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.