விவசாயி தற்கொலையை கொலை வழக்காக மாற்றிடுக
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
சேலம், மே 5 - விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட விவசாயின் வழக்கை கொலை வழக்காக காவல் துறையினர் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி வட் டம் கொட்டவாடி ஊராட்சி துக்கியாம் பாளையம் கிழக்குக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி வடிவேல். இவர், ஈக்விடாஸ் என்ற தனியார் வங்கியில் கடன் பெற்று முறையாக தவணைத் தொகையை கட்டி வந்துள்ளார். இந் நிலையில், ஒரு மாதம் மட்டும் தாம தம் ஏற்பட்ட நிலையில், வங்கி அதி காரிகள் அலைபேசியில், தொடர்பு கொண்டு இழிவாக பேசியுள்ளனர். இதனால், மனம் உடைந்த விவசாயி கடந்த 30ஆம் தேதி பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண் டார். இந்நிலையில், அண்மையில், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரில், தனியார் நிதி நிறு வனங்கள், இது போன்ற வரம்பு மீறி கடன் வசூல் செய்வதை தடை செய் வது குறித்து சட்டம் இயற்றப்பட்ட சூழலில், விவசாயி வடிவேலு வங்கி அதிகாரிகளின் இழிவான பேச்சுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலையை கொலை வழக் காக மாற்றி சம்பந்தப்பட்ட ஈக்விடாஸ் வங்கி அதிகாரிகள் மீது புதிய சட்டத் தின்படி நடவடிக்கை எடுக்க வேண் டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நட்ட ஈடு வழங்க வேண்டும், கடன் முழுவதும் தள்ளுபடி செய்திட வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாய கடன்கள் வழங்க வேண் டும். அசல் மற்றும் வட்டி முழுவதும் கட்டினால் தான் மீண்டும் கடன் என் கிற நிர்பந்தத்தை தேசிய வங்கிகள் கைவிட்டு பழைய நிலையையே தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சங்கத்தின் தாலுகா தலைவர் வி. பழனிமுத்து தலைமையில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மலைவாழ் மக்கள் சங்கம் மாநில பொருளாளர் ஏ. பொன்னுசாமி விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எ. அன்பழகன், மாவட்டப் பொருளாளர் ஆர்.வெங்கடாசலம் மாவட்ட துணைத் தலைவர் பி. தங்கவேலு மாவட்ட துணைச் செயலாளர்கள் எம்.ராம சாமி, ஆர். ராஜேந்திரன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் பி. ஆரியாக்கவுண்டர் உள்ளிட்ட திரளானோர் போராட்டத் தில் பங்கேற்றனர்.