தொடரும் கொலைகள்: குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை திணறல்
திருப்பூர், மே 8- திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தோட் டத்து வீடுகளில் தனியாக இருந்த வயதான விவசாய தம்பதிகள் மற்றும் குடும்பத்தார் என 15 பேர் ஒரே விதத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது. எனினும் இந்த கொலைச் சம்பவங்களில் குற்றவாளி களைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறை திணறி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் தொடங்கி, ஈரோடு மாவட்டம் குன்னாங் காட்டு வலசு, லிங்க கவுண்டன் வலசு, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மரு துறை பாரதிபுரம், ரங்கம்பாளையம், ஈரோடு சென்னிமலை உப்பிலிபாளை யம், என தொடர்ந்த சம்பவங்கள், ஆறு மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட் டம் அவிநாசிபாளையம் அருகே சேமலைகவுண்டம்பாளையம், கடை சியாக ஏப்ரல் மாத இறுதியில் ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி மேகரை தோட் டம் என ஏழு இடங்களில் தனியாக தோட் டத்து வீடுகளில் வசித்து வந்த வயதான விவசாயிகள் படுகொலை செய்யப்பட் டுள்ளனர். அவர்கள் அனைவரும் இரும்பு கம்பி, கட்டை போன்ற ஆயுதங் களால் கொடூரமாகத் தாக்கிக் கொல் லப்பட்டுள்ளனர். அவர்களது நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள் ளது. இதில் திருப்பூர் மாவட்டம் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் மகன், தாய், தந்தை என மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியது. இதற்காக ஏராள மான தனிப்படைகள் அமைக்கப்பட் டன. எனினும் இதுவரை குற்றவாளி களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே மாதிரி நடைபெற்றுள்ள படு கொலை சம்பவங்களில் காவல் துறையி னர் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், மேகரைத் தோட் டத்தில் விவசாயத் தம்பதி கொல்லப் பட்டது பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அதுவும் பொங்கலூர், காங்கேயம், சென்னிமலை வட்டாரத்தில் இந்த அனைத்து சம்பவங்களும் குறிப்பிட்ட எல்லைப் பரப்பிற்குள் நடைபெற் றுள்ளன. இதனால் தோட்டத்து வீடுக ளில் வசிக்கும் விவசாயக் குடும்பத்தினர் அச்சத்துடன் உள்ளனர். கொலையாளி களைக் கண்டுபிடிக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமப்புற மக் கள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகள் படுகொலைக்கு முற் றுப்புள்ளி வைக்கும் விதத்தில் மேற் கண்ட இந்த ஏழு இடங்களில் நடை பெற்ற அனைத்து கொலைச் சம்பவங் களையும் ஒருங்கிணைத்து சிறப்புப் புல னாய்வுக் குழு அமைத்து குற்றவாளி களைக் கண்டறிந்து தண்டிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பல்வேறு பொது நல, விவ சாய அமைப்புகள் கோரி வருகின்றன.