tamilnadu

காவிரி ஆற்றில் மணல் திட்டுகள் குடிநீர் தடைபடுவதாக புகார்

காவிரி ஆற்றில் மணல் திட்டுகள் குடிநீர் தடைபடுவதாக புகார்

நாமக்கல், ஜூன் 10- நன்செய் இடையாறு பகுதியில் பாயும் காவிரி ஆற்றில் தேங்கியுள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும், எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் திங்களன்று விவசாயி கள் மனு அளித்தனர். அம்மனுவில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், நன்செய் இடையாறு காவிரி ஆற்றுப்பகுதியில் தேங்கும் கழிவுநீரால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அணிச்சம்பாளையம் கிராமத்தில் காவிரி ஆற் றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. கடந் தாண்டு காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நன்செய் இடையாறு, ஆற்றங்கரையில் மிகப்பெரிய மணல் தட்டு கள் உருவாகின. இதனால் எங்களது கிராமத்திற்கு குடிநீர் தேவைக்கும், விவசாய தேவைக்கும் காவிரி ஆறு மற்றும் ராஜவாய்க்காலிலிருந்து தண்ணீர் வருவது தடைபட்டுள் ளது. அந்தநீர் முழுவதும் புகளூர் ஆற்றங்கரை ஓரமாக சென்று விடுகிறது. மேலும், ராஜவாய்க்காலில் வெங்கரை, பொத்தனூர், பரமத்தி வேலூர் ஆகிய ஊர்களின் கழிவுநீர்  கலந்து வருவதால் மணல் திட்டுக்கும், ராஜவாய்க்காலுக் கும் இடையே உள்ள குடிநீர் ஊற்று கிணறுகளில் சேரு கிறது. இதனால் பருகுவதற்கு ஏற்ப சுத்தமான நீர் கிடைப்ப தில்லை. எனவே, பொதுப்பணித்துறை மூலம் அணிச்சம் பாளையம் காவிரி நீர்த்தடுப்பு அணைக்கட்டு பகுதியில் இருந்து நன்செய் இடையாறு கிராமத்தில் உள்ள ஊற்று கிணறு வரைக்கும் ஏற்பட்டுள்ள மணல் திட்டுகளை அகற்ற வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.