tamilnadu

img

தனியார் பள்ளி பேருந்துகளில் ஆட்சியர் ஆய்வு

தனியார் பள்ளி பேருந்துகளில் ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், மே 8- நாமக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளி, கல்லூரி பேருந்துக ளில் மாவட்ட ஆட்சியர் உமா  ஆய்வு மேற்கொண்டு, ஓட்டு நர்களுக்கு அறிவுரை வழங் கினார். நாமக்கல் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவ ரத்து அலுவலகம் சார்பில், அதன் எல்லைக்குட்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள் வருடாந்திர ஆய்வு, வியாழ னன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் 664 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. குறிப்பாக, ஆவணங்கள், பிரேக், எப்சி, இன் சூரன்ஸ் மற்றும் கதவுகள், இருக்கைகள், டயர்கள் பாதுகாப்பாக இருக்கிறதா? என பரிசோதனை செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில், வட் டாரப் போக்குவரத்து அலுவலர் முருகேசன் உட்பட 10க்கும் மேற்பட்ட போக்குவரத்து அலுவலர்கள் இச்சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது, ஆட்சியர் உமா, பேருந்து ஓட் டுநர்களிடம், அவ்வப்போது கண், காது, உடல் பரிசோதனைகளை   செய்து, ஏதா வது பாதிப்பு இருக்கிறதா? என சோதனை செய்து, வாகனத்தை இயக்க வேண்டும், என  அறிவுரை கூறினார்.