tamilnadu

img

கோவை: நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி தற்கொலை?

கோவையில் நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை ஆர்எஸ்புரம் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ  கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார்.  மீண்டும் இந்த ஆண்டு  நீட் தேர்வுக்கு தன்னை தயார் படுத்தி வந்தார். தனியார் பயிற்சி பள்ளி ஒன்றில் சேர்ந்து தொடர்ந்து 2 ஆண்டுகளாக படித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம் நடைபெற இருந்த நீட் தேர்வு செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டிருந்தாலும் தேர்வுக்கு விதி விலக்கில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி சுபஸ்ரீ நீட் தேர்வு அச்சத்தால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இச்சம்பவம் குறித்து ஆர்.எஸ்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.