tamilnadu

img

கோவை தங்கநகை பூங்கா இந்தியாவிலேயே சிறந்ததாக அமையும்

கோவை தங்கநகை பூங்கா இந்தியாவிலேயே சிறந்ததாக அமையும்

அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

கோவை, மே 19- கோவையில் அமையவுள்ள தங்கநகை பூங்கா, இந்தியாவிலேயே சிறந்ததாக அமை யும், என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரி வித்துள்ளார். கோவை மாவட்டம், கொடிசியா வர்த்தக  கூட்டரங்கில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தமிழ் நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம்  குறிச்சி சிட்கோ தொழில் பேட்டையில் தங்க நகை பூங்கா அமைப்பது தொடர்பான கலந் தாய்வுக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த், சிறு  தொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்கு நர்/அரசு முதன்மை செயலாளர் ஏ.கார்த்திக்,  மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பவ னர், தொழில்துறை ஆணையர் எல்.நிர்மல் ராஜ் மற்றும் தங்க நகை தயாரிப்பாளர் சங்கப்  பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன்னிலையில் சிட்டார்க் நிறுவ னம் சார்பில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் மின் வாகன மோட்டார் சோதனைக்கான, புது  வசதி மையத்தை அமைப்பதற்கான புரிந் துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கோவையில் தங்க நகை  பூங்கா ஒன்று அமைத்துத்தர வேண்டும் என  முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையேற்று, கோவை மாவட்டத்தில் தங்க நகை பூங்கா ரூ.126 கோடி மதிப் பீட்டில் அமைக்கப்படும் என்று அறிவித் தார். அதனடிப்படையில், குறிச்சி சிட்கோ தொழில் பேட்டையில் ரூ.126 கோடி மதிப் பீட்டில் 2.46 ஏக்கர் பரப்பில், 8 லட்சத்து 86 ஆயி ரம் சதுர அடியில், எல்லா வசதிகளும் கொண்ட ஒரு தொழில் பூங்காவை அமைக்க  வேண்டும் என்று திட்டமிட்டு, கோவை யிலுள்ள 18க்கும் மேற்பட்ட தங்க, நகை  தொழில் முனைவோர் சங்கங்கள் ஒருங் கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத் தப்பட்டது. மேலும், எந்தெந்த வசதிகள் தேவை என்பதை அந்த சங்கங்களின் மூல மாக அறிந்து அதையும் நிறைவேற்றி தர வேண்டும் என்று, அந்த சங்கங்களுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, என் னென்ன திட்டங்கள், வசதிகள் அங்கே வர வுள்ளது என்று எடுத்துக் கூறியுள்ளோம். அவர்களும் பல்வேறு கருத்துக்களை வழங் கியுள்ளனர். கோவையில் அமைய உள்ள தங்க நகை  தொழில் பூங்கா இந்தியாவிலே மிகச் சிறந்த  பூங்காவாக அமையும். நமது நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது சிறு ஒரு தொழில் தான். நான்கு  ஆண்டுகளில் மட்டும் கோவை மாவட்டத் திற்கு ரூ.69 கோடியே 55 லட்சம் மானியம் கொடுத்து, ரூ.316 கோடியே 54 லட்சம் வங்கி  கடன் வாங்கி கொடுத்தும், 1,568 தொழில்  முனைவோர்கள் புதியதாக உருவாக்கப் பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 10  வகையான மானியங்கள் சிறு, குறு துறை யில் 202 தொழில்முனைவோர்களுக்கு ரூ.134  கோடியே 27 லட்சம் மானியம் வழங்கப்பட் டுள்ளது, என்றார்.

அமைச்சரிடம் சிஐடியு கோரிக்கை

முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிஐடியு கோயம்புத்தூர் தங்க நகை தொழிலாளர் யூனியன் பொதுச்செயலாளர் பி.சந்திரன், தலை வர் என்.எம்.கண்ணன், துணைத் தலைவர்  சம்பத்குமார் மற்றும் பல்வேறு சங்க நிர் வாகிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். சிஐடியு சார்பில் பங்கேற்க நிர்வாகிகள் புதிதாக  அமைய உள்ள தங்க நகை தொழில்  பூங்காவில் தங்க நகை தொழிலாளர் களுக்கு குறைந்த வாடகையில் வணிக வளாகம் கட்டித் தர வேண்டும். அந்த வணிக வளாகத்தில் தங்க நகை தொழிலா ளர்களுக்கு 10 x 16 அடியில் கடை கட்டி  கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை அமைச்சர் தா.மோ அன் பரசனிடம் தெரிவித்தனர்.