கோவை மாநகராட்சியின் அறிவுக்கருவூலம் 7 மாதத்தில் 37 ஆயிரம் இளைஞர்கள் பயன்
கோவை மாநகராட்சியின் நூலகம் மற்றும் அறிவு சார் மையம், திறக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் அறிவார்ந்த பசிக்கு விருந்தளித்து வருகிறது. 7 மாதங்களில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இளைஞர்கள் இந்த மையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், இம்மையத்தில் பயின்றவர்கள் சமீ பத்தில் நடைபெற்ற குரூப்-4 தேர் வில் 16 பேர் வெற்றிவாகை சூடியி ருப்பது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக அரசு, மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அவர்கள் தமிழ்நாடு முழுவ தும் 100 நூலகம் மற்றும் அறிவு சார் மையங்களைத் திறந்து வைத் தார். இம்மையங்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாண வர்களுக்குத் தேவையான புத்த கங்கள், கணினி மற்றும் இணைய தள வசதி, ஆன்லைன் மாதிரி தேர்வு கள் உள்ளிட்ட பல்வேறு வசதி களை ஒரே கூரையின் கீழ் வழங்கு கின்றன. கோவையில், ஆடிஸ் வீதியில் மாநகராட்சி சார்பில் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7,800 சதுர அடி யில் பிரம்மாண்டமான நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக் கப்பட்டுள்ளது. இங்கு டி.என்.பி.எஸ்.சி, குரூப் தேர்வுகள் மட்டு மின்றி, யு.பி.எஸ்.சி, வங்கித் தேர்வு கள், ரயில்வே தேர்வுகள், கேட், நீட், ஜே.இ.இ போன்ற பல்வேறு போட் டித் தேர்வுகளுக்கான 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எவ்வித இடையூறும் இன்றி படிப் பதற்கு ஏற்ற அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த மையத்திற்கு வரும் மாணவர்க ளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கி றது. மேலும், தமிழ்நாடு அரசின் இணையதளம் மூலம் வழங்கப் படும் கேள்வித்தாள்கள், பதில்கள் மற்றும் ஆலோசனைகளை பெரிய திரையில் பார்த்துப் படிக்கும் வசதி, குடிநீர் மற்றும் வாகன நிறுத்து மிடம் போன்ற அடிப்படை வசதிக ளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள் ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் திறக் கப்பட்ட இந்த மையத்திற்கு தின மும் சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வருகை தந்து பயன டைந்து வருகின்றனர். 16 கணினி கள், அதிவேக வைஃபை இணைய வசதி, 2,300 போட்டித் தேர்வு புத்த கங்கள் மற்றும் தடையில்லா மின் சார வசதிக்காக ஜென்செட் வசதி என அனைத்து நவீன வசதிகளும் இங்கு உள்ளன. இதன் விளைவாக, கடந்த 7 மாதங்களில் மட்டும் சுமார் 37 ஆயிரம் முறை இளைஞர்கள் இந்த அறிவுசார் மையத்தைப் பயன்ப டுத்தி தங்கள் அறிவை மெருகேற்றி யுள்ளனர். குறிப்பாக, இந்த மையத் தில் பயிற்சி பெற்ற 16 மாணவர்கள் சமீபத்திய குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றது இந்த மையத்தின் சாதனை களுக்கு மேலும் ஒரு மணிமகுட மாக அமைந்துள்ளது. போட்டித் தேர்வுக்குத் தயாரா கும் இளைஞர்கள் இதுகுறித்து கூறு கையில், “குரூப் தேர்வுகளுக்கு தனியார் பயிற்சி மையங்களில் அதிக கட்டணம் செலுத்த வேண்டி யுள்ளது. ஆனால், மாநகராட்சி யின் இந்த அறிவுசார் மையம், போட்டித் தேர்வுகளுக்கான புத்த கங்கள், கேள்வித்தாள்கள், அமை தியான படிப்புச் சூழல், இணைய வசதி மற்றும் தடையற்ற மின்சார வசதி என அனைத்தையும் இலவச மாக வழங்குகிறது. இதனால் எங்க ளால் சிரமமின்றி போட்டித் தேர்வு களுக்குத் தயாராக முடிகிறது” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்த னர். தற்போது ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிகள் மற்றும் உயர்கல்விக்கான நீட், ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தனியார் நிறுவனங்கள் லட்சக்க ணக்கில் கட்டணம் வசூலிப்பதால், ஏழை எளிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போட்டித் தேர்வுக ளுக்குத் தயாராவது பெரும் சவா லாக இருந்து வருகிறது. இந்நிலை யில், அரசு சார்பில் அனைத்து வித மான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் வகையில், தனியார் நிறுவனங்களுக்கு நிகராக அனைத்து வசதிகளுடன் ஏற்ப டுத்தப்பட்டுள்ள இந்த அறிவுசார் மையங்கள், ஏழை எளிய இளை ஞர்களிடம் வரவேற்பை பெற்றுள் ளது. கோவை மாநகராட்சியின் இந்த முன்மாதிரியான முயற்சி, மற்ற மாநகராட்சிகளுக்கும் ஊக்கம ளிப்பதாக அமைந்துள்ளது என்ப தில் ஐயமில்லை.