tamilnadu

img

ஓட்டுநர் மீதான தாக்குதல் சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஓட்டுநர் மீதான தாக்குதல் சிஐடியு ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 10- மதுரையில் அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநர் ஒருவரை கிளை மேலா ளர் செருப்பால் தாக்கியதைக் கண் டித்து, ஈரோடு மாவட்டத்தில் அரசுப்  போக்குவரத்து கழகப் பணிமனைகள்  முன்பு இன்று செவ்வாய்க்கிழமை சிஐ டியு-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஈரோடு 1 மற்றும் ஈ3 கிளைப் பணி மனைகள் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மண்டல துணைப் பொதுச் செயலாளர் எஸ். இளங்கோவன் தலைமை வகித்தார். முன்னால் கிளை  மேலாளர் ஆர். அர்ச்சுனன், மண்டலத் தலைவர் கே. மாரப்பன், பொதுச் செய லாளர் டி. ஜான்சன் கென்னடி ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதேபோல், சத்தியமங்கலம், அந்தி யூர் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் திரளான அரசு  போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்ற னர்.