tamilnadu

img

பல்கலைக்கழக கட்டண உயர்வை ரத்து செய்க!

பல்கலைக்கழக கட்டண உயர்வை ரத்து செய்க!

பாரதியார் பல்கலைக்கழகத் தில் பி.எச்.டி. ஆராய்ச்சி மாணவர்க ளுக்கான கட்டண உயர்வை ரத்து  செய்ய வலியுறுத்தி, இந்திய மாண வர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எஃப்.ஐ) இணைந்து கல் லூரி மாணவர்களிடையே கையெ ழுத்து இயக்கத்தை நடத்தியது. பல்கலைக்கழக நிர்வாகம், பி.எச்.டி. மாணவர்களுக்கு அதிர்ச் சியளிக்கும் வகையில் கட்டணங் களை உயர்த்தியுள்ளது. குறிப் பாக, Synopsis கட்டணம் ரூ.3,500 லிருந்து ரூ.6,000 ஆகவும், Thesis  Submission கட்டணம் ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆகவும் உயர்த் தப்பட்டுள்ளது. மேலும், Revision/ submission of Phd Thesis கட் டணம் ரூ.10,000 லிருந்து ரூ.18,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு, தற் போதைய மாணவர்கள் மற்றும் எதிர்கால மாணவர்களையும் கடு மையாக பாதிக்கும் என மாணவர் கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக,  பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களுக்கு இது  பெரும் சுமையாக இருக்கும். எனவே, மாணவர்களின் நலனை  கருத்தில் கொண்டு, கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்  என வலியுறுத்தி இந்த கையெ ழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் அக மது ஜூல்பி, நிர்வாகிகள் பாவேல், உமா மகேஸ்வரி, வாலிபர் சங்க  மாவட்டப் பொருளாளர் தினேஷ்  ராஜா, நிர்வாகிகள் சக்திவேல், சந் துரு ஆகியோர் இந்த இயக்கத்தில் கலந்து கொண்டனர். சேலம் இதேபோன்று, சேலம் கோட்டை மைதானத்தில் செவ்வா யன்று, இந்திய மாணவர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில், கல்லூரி விடுதிகளுக் கான  ஒருங்கிணைந்த சமையல்  கூடம் (கிச்சன் ) திட்டத்தை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும். விடுதி மாணவர்களின் உணவுப் படியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இந்திய மாணவர்  சங்கத்தின் சேலம் மாவட்டக் குழு வின் சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் டார்வின் தலைமை தாங்கினார். மாவட்டக் செயலாளர் சே.பவித்திரன் கண் டன உரையாற்றினார். முடிவில், மாவட்ட துணைத் தலைவர் அபி ராமி நன்றி கூறினார். இதில் மாவட்ட  துணைத் தலைவர் கோகுல், மாவட்டக் குழு உறுப்பினர் நவீன் உள்ளிட்ட விடுதி மாணவர்கள் திர ளானோர் பங்கேற்றனர்.