tamilnadu

img

நிழற்கூடம் இல்லாத பேருந்து நிறுத்தம் கடும் வெயிலில் மக்கள் அவதி

நிழற்கூடம் இல்லாத பேருந்து நிறுத்தம் கடும் வெயிலில் மக்கள் அவதி

திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இரு புறமும் பயணிகள் நிழற் கூடங்கள் அமைத்துத்தர வேண்டும், என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள் ளனர். நாமக்கல் - திருச்செங் கோடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கூத்தம்பூண்டி ஊராட்சிக் குட்பட்ட மாணிக்கம்பாளையம் என்ற ஊர்,  எலச்சிபாளையம் ஒன்றியத்தில் மிக முக்கிய மான ஊராக அமைந்துள்ளது. புள்ளாக்க வுண்டம்பட்டி, லத்துவாடி உள்ளிட்ட கிரா மங்களில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் மாணிக்கம்பாளையம் பேருந்து  நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். முக் கிய சாலையாக மாணிக்கம்பாளையம் உள் ளது. இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூட வசதி இல்லாததால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந் தித்து வருகின்றனர். இதுகுறித்து சுதந்திரப் போராட்ட தியாகி யின் பேரனும், வழக்கறிஞருமான கெ.செ. செந்தில்குமார் கூறுகையில், கடந்த சில  வருடங்களுக்கு முன்பு ஊரின் சார்பில் நிழற் கூடம் சொந்தமாக அமைக்கப்பட்டிருந்தது. சாலை விரிவாக்கப் பணியின்போது நிழற்கூ டம் அகற்றப்பட்டது. ஆனால், மீண்டும் நிழற் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை அரசுத் துறை அதிகாரிகளுக்கும், மாதாந்திர சாலைப் பாதுகாப்புக் கூட்டத்திலும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. கடுமை யான வெயில் ஏற்பட்டுள்ள நிலையில் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நெடுஞ் சாலைத்துறை நிர்வாகம் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும், என்றார்.