tamilnadu

img

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம்

பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம்

கோவை, ஏப். 23 – பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் அகில இந்திய மாநாடு கோவை யில் நடைபெற உள்ள நிலையில்,  இம்மாநாட்டை வெற்றிகரமாக  நடத்துவது குறித்த வரவேற்புக் குழு கூட்டம் புதனன்று கோவை யில் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத் தின் 11 ஆவது அகில இந்திய மாநாடு வரும் ஜூலை மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான வரவேற்புக் குழு கூட்டம் புதனன்று கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள  ஜீவஜோதி ஹாலில் நடைபெற் றது.  இக்கூட்டத்திற்கு அகில இந்திய துணை பொதுச்செயலாளர் எஸ்.செல்லப்பா தலைமை தாங்கினார். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி  முடிப்பதற்கான பல்வேறு குழுக் களான உணவுக் குழு, விளம்பரக்  குழு, போக்குவரத்துக் குழு மற்றும்  மாநாட்டு பிரதிநிதிகள் தங்குவதற் கான ஏற்பாட்டுக் குழுக்களின் பொறுப்பாளர்கள் இந்த கூட்டத்தில்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டனர். வரவேற்புக் குழுவின் செயலாளர் எஸ்.மகேஸ்வரன் வர வேற்று பேசினார். முன்னாள் மாநி லத் தலைவர் ஏ.பாபு ராதா கிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய பிஎஸ்என்எல் டாட்  ஓய்வூதியர் சங்க அகில இந்திய  அமைப்பு செயலாளர் வி.வெங்கட் ராமன், பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழி யர் சங்க மாநிலத் தலைவர் சையது இத்ரீஸ் ஆகியோர் சிறப்புரையாற் றினர். முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினரும், வரவேற்புக் குழுவின் தலைவருமான பி.ஆர். நடராஜன்  மற்றும் அகில இந்திய துணை  பொதுச்செயலாளர் எஸ்.செல் லப்பா ஆகியோர் நிறைவுரையாற் றினர். முன்னதாக, பிஎஸ்என்எல் ஊழி யராகவும், சங்கத்தின் முன்னாள் மாநிலப் பொருளாளராகவும், சென்னை பிஎஸ்என்எல் அலுவலக  பொருப்பாளராக பணியாற்றி ஓய்வுபெறும் சீனிவாசன் மற்றும்  சங்கத்தின் மாநில நிர்வாகியாக வும், பிஎஸ்என்எல் நிறுவனத்தின்  முதல் பெண் இளம் பொறியாளரு மான அழகு நாச்சியார் ஆகியோர் வரவேற்புக் குழு கூட்டத்தில் கௌ ரவிக்கப்பட்டனர். இந்த வரவேற்புக் குழு கூட்டத் தில், தமிழகம் முழுவதும் இருந்து  தேர்ந்தெடுக்கப்பட்ட வரவேற்புக் குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.